நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?
தனுஷ், தன் அக்கா மகன் பவிஷை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் என்பது தெரிந்ததே. அதுபோல, அடுத்த தகவல் பார்ப்போம்..
தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிட்சயமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான கதை உருவாக்கும் படலத்தில் இருக்கிறார் தனுஷ்.
தனுஷ் இயக்கத்தில் அவரது மகன் யாத்ரா அறிமுகமாக இருக்கிறாரா அல்லது கதையை மட்டும் கொடுத்து வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், யாத்ரா நாயகனாக அறிமுகமாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் யாத்ரா மற்றும் லிங்கா. சில வருடங்களுக்கு முன்பு இருவருமே விவகாரத்து பெற்றாலும், மகன்கள் விஷயத்தில் இருவருமே கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து வருகிறார்கள். இதனால் ரஜினியின் ஆசீர்வாதத்தில் விரைவில் யாத்ரா நாயகனாக அறிமுகமாகும் அறிவிப்பு வெளியாகக் கூடும்.
முன்னதாக, தனுஷை நாயகனாக ‘துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வாயிலாக அறிமுகப்படுத்தியது அவருடைய அண்ணன் செல்வராகவன் என்பது நினைவுகூரத்தக்கது.


