ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் எமோஷனலான பதிவை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் உன்னை முதல் முறை சந்திப்பதால் கண்ணீர் விடுவதை நிறுத்த முடியவில்லை தலைவா என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் திரை உலகில் 50 வருடம் கடந்ததை குறித்தும் பேசி உள்ளார். இது மட்டும் இல்லாமல் கூலி படத்தில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram