ஜீரணப் பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றவும், மலச்சிக்கல் பிரச்சனையால் இருந்து விடுபடவும் ஜீரண பொடி மிகவும் பயன்படுகிறது. அதனை தயாரிக்கும் முறையையும் அதில் இருக்கும் பலன்களை குறித்தும் நாம் பார்க்கலாம்.
முதலில் 100 கிராம் ஓமம் 50 கிராம் கருஞ்சீரகம் 250 கிராம் வெந்தயம் எடுத்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் உணவுக்கு பின் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து குடித்து வர வேண்டும்.
இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.குறிப்பாக இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் எலும்புகளின் உறுதிக்கும் உடல் சுறுசுறுப்பிற்கும் இது உதவுகிறது.
மேலும் ஈறு பிரச்சனை மற்றும் கண் பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு பயன்படுகிறது.

