Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஈஸ்வரி எடுத்த முடிவு. கோபிக்கு காத்திருந்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தா வீட்டுக்கு வந்த ஈஸ்வரி எழில் சொன்னா நீங்களும் சரின்னு சொல்லிடுவீங்களா அவன் அப்படித்தான் யார் கஷ்டப்பட்டாலும் அவனுக்கு பார்க்க பிடிக்காது. அமிர்தாவுக்கே அவள மாதிரியே பொண்டாட்டி செத்துப்போன யாரையாவது ஒருத்தனே புடிச்சு கல்யாணம் பண்ணி வையுங்க எழிலோட கல்யாணம் நடக்காது அவனுக்கு வேறொரு இடத்துல பொண்ணு பார்த்து முடிவு பண்ணியாச்சு என சொல்லி ஈஸ்வரி அங்கிருந்து கிளம்புகிறார்.

வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி மற்றும் செழியன் என இருவரும் வர்ஷினியை வீட்டுக்கு அழைத்து எழிலுக்கு கல்யாணம் பண்ணலாம் என பேச வர்ஷினி அதான் நான் இருக்கேன் என சொல்ல பிறகு எழில் மற்றும் வர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கின்றனர். வர்ஷினி வீட்டில் பேசிவிட்டு சொல்லுமாறு அனுப்பி வைக்கின்றனர்.

அதன் பிறகு பாக்யா ராஜசேகரை சந்திக்க அவரது ஹோட்டலுக்கு வந்திருக்க அதே ஹோட்டலுக்கு கோபி சந்திக்க வர ஒரு கட்டத்தில் கோபி பாக்கியா ராஜசேகர் இருவரும் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து பாக்கியா நடத்தையில் சந்தேகப்படுகிறார்.

இருவரும் ஹோட்டலில் இருந்து ஆபீசுக்கு கிளம்பியதும் பாக்யா நல்லவ மாதிரி பேசுவா ஆனா ஏன் இப்போ இப்படி மாறிட்டா என மனதுக்குள் நினைக்கிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshimi serial episode update
baakiyalakshimi serial episode update