பரோட்டா சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே பரோட்டா அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய மிக முக்கிய காரணம் இதில் இருக்கும் சுவை. ஆனால் இது அதிகமாக சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் பீட்சா பர்கர் மற்றும் பிஸ்கட் வகைகளையும் மைதாவையே பயன்படுத்தி செய்கின்றன.
மைதா கோதுமையில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் அதில் உள்ள மேல் தவிடு நீக்கப்பட்டு நார்ச்சத்து முழுமையாக அகற்றப்படுகிறது. நார்ச்சத்து இல்லாத மைதா சாப்பிடும் போது குடலில் ஒட்டிக்கொண்டு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். மேலும் அஜீரணக் கோளாறையும் ஏற்படுத்தி விடுகிறது.
மேலும் மைதாவில் நார்ச்சத்து அழிக்கப்படுவதால் அமிலமாக செயல்பட்டு கால்சியத்தை குறைத்து எலும்புகளை பலவீனமாக்கும்.
மைதாவில் இருக்கும் மாவுச்சத்து உடல் பருமன் அதிகரிப்பது மற்றும் கெட்ட கொழுப்பை அதிகரிக்கத் தொடங்கும். இது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகவும் அதிகரித்து உடலில் ரசாயன எதிர்வினை உருவாக்குகிறது.
இப்படி நார்ச்சத்து இல்லாத மைதாவை சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

