முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைய வைக்க தேன் பெருமளவில் உதவுகிறது.
பொதுவாகவே தேனில் அதிகமாகவே சுவை இருக்கும். அது மட்டும் இல்லாமல் தேனில் மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது.
மேலும் முகத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் தழும்புகளை மறைக்கவும் தேன் பயன்படுத்தலாம்.
தேனில் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் பி புரதம் பொட்டாசியம் சோடியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் தேனில் இருக்கிறது. இதை பயன்படுத்தி எப்படி முகத்தை தெளிவாக வைத்துக் கொள்வது என்று பார்க்கலாம்.
முகம் பளபளப்பாக இருக்க பால் மற்றும் கடலை மாவு எடுத்துக்கொண்டு அதைத் தேனில் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு முகத்தில் முழுவதுமாக தடவி விட வேண்டும். இப்படி தடவி வந்தால் கரும்புள்ளிகள் முகத்தழும்புகள் நீங்கி பொலிவாக இருக்கும்.
இரவில் தூங்குவதற்கு முன் தேனில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் கரும்புள்ளிக்கு சிறந்த மருந்தாக அமையும்.

