Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்தாரிடம் உண்மையை உடைத்த பாக்கியா.. ஷாக்கான கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshimi serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஈஸ்வரி அவன் இப்போதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்கான் அவன நிக்க வச்சு கேள்வி கேட்கிறாய் என சத்தம் போட்டு இருக்கிறார். அவர் அதிர்ச்சியில் தான் மயக்கமானார் அவர் உடம்பிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என சொன்னாங்கல என பாக்கியா பதில் கூறுகிறார்.

பிறகு ஹாஸ்பிடல்ல இவருக்கு பணம் கட்டியது யாரு என கேட்க அதான் அவருடைய வைஃப்னு சொன்னாங்களே, அப்புறம் என்ன என்ன செழியன் சொல்ல வைப்-னு சொன்னாங்க ஆனா பாக்கியலட்சுமி என்று சொன்னாங்களா என கேட்கிறார்.

இதுவரைக்கும் என் வாழ்க்கையில எது நடக்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்தன அது நடந்துடுச்சு. இவர் மேல எனக்கு சந்தேகம் வந்து ரொம்ப நாளாச்சு ஆனா அது எதுவும் உண்மையாக இருக்கக் கூடாது இது குடும்பத்தோட சந்தோஷம் கெட்டுப் போகக்கூடாது என ஒவ்வொரு நிமிஷமும் நான் வேண்டிக்கிட்டு இருந்தேன் ஆனா அது நடந்துச்சு. ஹாஸ்பிடல்ல இவரை பார்க்க போனா எனக்கு முன்னாடியே இவரு வர சொல்லி இருந்த ஒருத்தவங்க வந்து பணம் கட்டி இருக்காங்க, நர்ஸ் கிட்ட இவர் பார்க்கணும்னு பொய் கேட்டா நீங்க யாரு என கேட்டாங்க நான் அவருடைய மனைவின்னு சொன்னா.. நீங்க மனைவின்னா அப்போ அவங்க யாரு என கேவலமா பார்த்தாங்க.

சரி இவர் கண் முழிச்சதும் பார்க்க போலாமே பண்ணா அவங்க இருக்கிறாங்கன்னு சொன்னாங்க. ஒரு மனைவி பார்க்கக் கூடாது விஷயத்தை நான் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். கதவு திறந்தால் இவர் அவங்களோட கைய புடிச்சுகிட்டு என் வாழ்க்கையை விட்டு போயிடாத நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்னு சொல்லிட்டு இருந்தாரு என சொல்ல ஈஸ்வரி நீ ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு பேசாத என திட்டுகிறார். இத்தனை வருஷம் கோபியுடன் வாழ்கிற அவன் எப்படி உனக்கு தெரியாதா என சொல்ல இவ்வளவு நாளா கற்பனையில் தான் வாழ்ந்தேன் என பாக்யா கூறுகிறார்.

பிறகு எழிலும் அப்பா தப்பு பண்ணி இருக்காரு அது எனக்கு ஏற்கனவே தெரியும் அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க கஷ்டப்படுவாங்கன்னு தான் நான் யார்கிட்டயும் சொல்லாம என் மனசுக்குள்ளே போட்டு நொந்து கிட்டு இருந்தேன். இப்போ தான் அம்மாவுக்கு தெரிஞ்சிருச்சு, இனிமே எதுக்கு பொறுமையாக இருக்கணும் என சொல்ல ஈஸ்வரி அது சரியா கோபி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshimi serial episode update

baakiyalakshimi serial episode update