வெறும் வயிற்றில் காலையில் தண்ணீர் குடிப்பதில் இருக்கும் ஐந்து பயன்களை குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிப்பது வழக்கம். ஆனால் அதற்கு முன் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துகிறது.
முதலாவதாக எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உணவை அதிகமாக சாப்பிட விடாமல் தடுக்க உதவுகிறது.
இரண்டாவதாக படிப்பவர்களுக்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஏனெனில் இது உடல் சோர்வை நீக்கி மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் தேவையான நீர்ச்சத்தை கொடுக்கிறது.
குறிப்பாக வறண்ட சருமம் மற்றும் முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் முக்கியமாக பயன்படுகிறது.
எனவே வெறும் வயிற்றில் காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

