Tamilstar
Health

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் 4 இலைகள்.

4 leaves are a cure for diabetes

சர்க்கரை நோய்க்கு மருந்தாக நான்கு இலைகள் பயன்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய நோயாக நீரிழிவு நோய் உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள சில உணவு பழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். அப்படி சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நான்கு இலைகளை குறித்து தான் நாம் பார்க்கப் போகிறோம்.

முதலாவதாக நாம் பார்க்கப்போவது கறிவேப்பிலை. கருவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

இரண்டாவதாக சாப்பிடக்கூடிய இலை வெந்தயக்கீரை. வெந்தயக் கீரையில் இருக்கும் அதிக அளவு ஊட்டச்சத்து நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மூன்றாவதாக பயன்படுத்த வேண்டிய இலை மாவிலை. மாமரத்தின் இலைகளை நன்றாக கழுவி மென்றோ அல்லது கொதிக்க வைத்தோ அந்த நீரை பருகலாம். மாவிலையில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நான்காவது நாம் பயன்படுத்த வேண்டியது வேப்பிலை. வேப்பிலையை நன்றாக காய வைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்து வரவேண்டும்.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.