Tamilstar
Spiritual

வரவிருக்கின்ற குரு பெயர்ச்சியின் பலன்: மேஷம் ராசியினருக்கு எப்படி?

நம் வாழ்வில் சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி முக்கியமானதொரு ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் சனி பெயர்ச்சியானது ஜனவரி 17 ஆம்திகதிநடைபெற்றது.

இதனையடுத்து குரு பெயர்ச்சி வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

குரு பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் அவரால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு இருக்கையில் குரு பகவனால் மேஷராசிக்காரர்களுக்கு இந்த காலப்பகுதி எவ்வாறு அமைய போகின்றது என்று பார்க்கலாம்.

மேஷம்
குரு பகவான் இந்த குரு பெயர்ச்சியில் உங்கள் ராசியில் ஜென்ம ஸ்தானத்தில் அமர இருகின்றார். அதனால் ஏற்பட போகும் பலன்களை பார்ப்போம்.

பலன்கள்

  • எந்த காரியத்தையும் சாதிக்கும் திறன் காணப்படுகின்றது.
  • அனைத்து செயல்களிலும் முழு ஈடுப்பாட்டுடன் செயற்படுவீர்கள்.
  • உங்கள் மீது அனைவருக்கும் மதிப்பு மரியாதை ஏற்படும்.
  • பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயரும்.
  • சம்பளம் உயரும்.
  • குடும்பத்தில் மதிப்பு ஏற்படும்.
  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைக்கூடி வரும்.
  • புத்திர பாக்கியம் கிடைக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள்.

இவ்வாறு பல நல்ல பலன்களை தந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் தடங்கள் ஏற்பட வாய்புண்டு. ஆகவே தட்சணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிப்பட்டால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.