deepika padukone
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே, இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தற்போது நிறைய பெண்கள் சினிமாவை ஒரு தொழிலாக செய்ய தைரியமாக வருகிறார்கள். முந்தைய காலத்தில் நடிகைகளை மோசமாக பார்த்தனர். இந்த தொழிலுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது. பெரிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு எல்லா தகுதியும் இருந்தாலும் நடிப்பதற்கு பயந்தனர்.
ஆனால் இப்போது நடிகர்-நடிகைகளை பெருமையாக பார்க்கிறார்கள். வெளியே சென்றால் மரியாதை கொடுக்கிறார்கள். பிடித்த நடிகர், நடிகைகள் என்ன செய்தாலும் அதை பின்பற்ற விரும்புகிறார்கள். நிறைய பெண்கள் வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராக சினிமா துறையில் வந்து பணியாற்றுகிறார்கள்.
முன்பெல்லாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதும் நிலைமை இருந்தது. கதாநாயகிகள் என்றால் ஆடிப்பாடுகிறவர்கள், ரசிகர்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக வந்து போகிறவர்கள் என்று நினைத்தார்கள். அது இப்போது மாறி இருக்கிறது. கதாநாயகிகளுக்கு என்று பிரத்யேகமாக கதை எழுதும் காலம் வந்து விட்டது. சினிமா துறை மீது நம்பிக்கை ஏற்பட்டு புதிது புதிதாக நிறைய பேர் சினிமா பக்கம் வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.”
இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…