Categories: NewsTamil News

மாஸ்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேட்டி

விஜய் நடித்து, லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில், மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் கடந்த மாதம் 9-ந்தேதி திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது. இந்த நிலையில், ஜோதிகா நடித்து கடந்த மாதம் வெளியாக இருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதேபோல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படமும் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகும் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி அந்த படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்ட போது, “மாஸ்டர் படம் இணையதளத்தில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என்பது வெறும் வதந்தி. சந்தர்ப்பம் பார்த்து யாரோ வதந்தியை பரப்புகிறார்கள். பல கோடி செலவில் உருவான ‘மாஸ்டர்’ படம் தியேட்டர்களில்தான் வெளிவரும். இணையதளத்தில் ‘ரிலீஸ்’ ஆகாது” என்று அவர் கூறினார்.

Suresh

Recent Posts

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

2 hours ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

2 hours ago

‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…

2 hours ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

2 hours ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

2 hours ago

நூறு சாமி திரை விமர்சனம்

இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…

1 day ago