marudhanayagam
கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மருதநாயகம் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இப்படத்தை இனி தொடங்கினாலும் அதில் தான் நடிக்கப்போவதில்லை என கமல் கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் கமல் நேற்று கலந்துரையாடினார். அப்போது மருதநாயகம் படம் குறித்த கேள்வியை விஜய் சேதுபதி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், மருதநாயகத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் உடனே வெளியிட்டு விடலாம். ஆனால் அதை படமாக எடுக்க பணம் வேண்டும். அந்த பணம் இருந்தால் உடனே உருவாகும். நான் உருவாக்க நினைத்த மருதநாயகம் 40 வயது கதாநாயகனுக்காக எழுதப்பட்டது. இப்போது என்னால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது. ஆகவே வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும், இல்லையெனில் கதையையே மாற்ற வேண்டும் என்றார்.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…