சைக்கோ டிரைலர் விமர்சனம்

டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர்கள் சிங்கம்புலி, ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மென்மையான இசையுடன் தொடங்கும் இந்த டிரைலரில் சந்தோஷம், ஆச்சரியம், தேடல், ரத்தம், கோபம், அமைதி, பரிதவிப்பு, பழிவாங்கும் வெறி, பாசம், நேரம், காத்திருப்பு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிஷ்கினின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாம் கேட்ட இசையுடன் தொடங்கும் இந்த டிரைலர் இளையராஜாவின் பின்னணி இசையோடு வரும்போது காட்சிகளின் விறுவிறுப்பு கூடுகிறது. இந்த டிரைலரில் கொலை, ரத்தம் சிதறல்கள் இருந்தாலும், இசையால் மென்மையாக்கி, காட்சிகளால் மிரட்டி இரண்டையும் மிக்ஸிங் செய்து கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில், வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல், பேய் மீது பரிதாபப்படும் அளவிற்கு படத்தை உருவாக்கி இருந்தார். அதுபோல், இந்த சைக்கோ திரைப்படமும் பல கொலைகள் இருந்தாலும், அந்த கொலைகள் கூட ரசிக்கும் படி கொடுத்திருக்கிறாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

Suresh

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

1 day ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

1 day ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 day ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

1 day ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

1 day ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 day ago