கோடி கோடியாய் சம்பாதித்தும் உதவ மனமில்லையா – ஹீரோயின்கள் மீது நடிகர் சாடல்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஊரடங்கால் திரையுலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு பட உலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ முன்னணி கதாநாயகர்கள் பலர் பெப்சி அமைப்புக்கு நிதி கொடுத்து உள்ளனர்.

அரிசி மூட்டைகளும் வழங்கப்படுகின்றன. துணை நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கும் நிதி வழங்கி வருகிறார்கள். தெலுங்கு நடிகர்களும் அங்குள்ள தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்து வருகிறார்கள். ஆனால் கதாநாயகிகள் பணம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில் ஸ்ரீகாந்துடன் ஜூட், சிம்புவின் சரவணா, பிரசாந்துடன் சாகசம் ஆகிய படங்களில் நடித்துள்ளவருமான பிரம்மாஜி கூறும்போது, ‘தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடிக்க கோடி கோடியாக சம்பளம் வாங்கிய மும்பை கதாநாயகிகள் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வராதது வியப்பாக உள்ளது. லட்சங்களை கொடுக்க வேண்டும் என்று இல்லை. சில ஆயிரம் ரூபாய்களையாவது கொடுத்து உதவி இருக்க வேண்டும். அதிக சம்பளம் வாங்கிய அவர்களுக்கு உதவ மனம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது’ என்றார்.

Suresh

Recent Posts

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

13 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

21 hours ago

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!

காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

21 hours ago

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

22 hours ago

முத்துவை அசிங்கப்படுத்திய அருண், சீதா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

23 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

24 hours ago