kajal aggarwal
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம்.
உள்ளூர் உணவகங்களில் சாப்பிடலாம். நம் நாட்டில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம். இது நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவினால் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…
‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…
தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…
மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju