Why did the Delhi High Court issue a notice to Salman Khan?
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?
பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வெளியான ‘மதராஸி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இச்சூழலில் சல்மான்கான் தொடர்பான வழக்கு பற்றிக் காண்போம்..
ஆளுமை உரிமை வழக்கில் சல்மான் கானுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சல்மான் கான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆளுமை உரிமை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
விசாரித்த நீதிமன்றம், சல்மான்கானின் அடையாளம், குரல் போன்றவற்றை எந்த நபரோ, வலைதளமோ, செயலியோ அல்லது மின் வணிக தளமோ பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்று குரல் மாதிரிகளை உருவாக்குவதை முதன்மை வணிகமாகச் செய்து வருகிறது. இந்நிறுவனம் சல்மான் கானின் ஆளுமை உரிமை வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி, சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கை பிப்ரவரி.27-ந் தேதிக்குத் தள்ளிவைத்தது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…