ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது.

கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் விருப்ப ஒய்வு பெற்றுவிட்டு விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார். தவெகவின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள இவர், கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையில் இவர் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர், ஜனநாயகன் படத்தின் வாயிலாக நடிகராகவும் மாறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், ‘என்னை ஜனநாயகன் படத்தில் நடிக்க வைத்ததே விஜய் தான். நடிக்க ஆசையாக இருப்பதாக அவரிடம் கூறினேன். இதனையடுத்து தன்னுடைய கடைசி படத்தில் என்னை நடிக்க வைத்தார் விஜய். ஒருநாள் முழுவதும் ஜனநாயகன் படப்பிடிப்பில் நான் பங்கேற்றேன்’ என தவெக நிர்வாகி அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

Why did I act in the film Janyayan? Arunraj opens up about his feelings
dinesh kumar

Recent Posts

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

15 minutes ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

1 hour ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

1 hour ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

2 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

2 hours ago

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94. 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக…

2 hours ago