"We must work together to save art and cinema" Karthik Subbaraj
“கலை மற்றும் சினிமாவை காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” கார்த்திக் சுப்பராஜ்
சினிமா வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள முழக்கம் பார்ப்போம்..
‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில்,
‘குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை தாமதமானதன் காரணமாக வெளியீடு தள்ளிப் போகிறது.
நாளை வெளியாகவிருக்கும் மற்றொரு பெரிய பட்ஜெட் படமான ’பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக பல திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.
சுயாதீன மற்றும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் அதிக ஆதரவளிக்க வேண்டும். ஏனென்றால், பெரிய டிவி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயாதீனப் படங்களை வாங்க அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால், குறைந்த பட்ஜெட் படங்களுக்கு வருவாய்க்கான ஒரே ஆதாரமாக திரையரங்குகள் மட்டுமே உள்ளன. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்காமல் இருப்பது, சினிமாவை அழிப்பதற்கு சமம்.
பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை. இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைக்கான கடுமையான விதிகளைப் பின்பற்றுவது மிகவும் கடினமாக உள்ளது. இது குறிப்பாக, வெளியீட்டுத் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கும்போது, படத் தயாரிப்பாளர்களின் படைப்புச் சுதந்திரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டுத் தணிக்கைக்கான தற்போதைய காலக்கெடு விதிகளின்படி, ஒரு படம் முழுமையாக முடிக்கப்படுவதற்கு வெளியீட்டுத் தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.
இது பல காரணங்களால் சாத்தியமற்றது. இது சீரமைக்கப்பட்டு, படத் தயாரிப்பாளர்களுக்குச் சற்று எளிதாக்கப்பட வேண்டும். இது தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என அனைவராலும் செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் தள்ளிப்போவது இறுதியில் இந்தத் துறையையே அழித்துவிடும்.
திரைத்துறையினரே, நாம் அனைவரும் ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட நோக்கங்கள், வெறுப்புப் பிரச்சாரங்கள் ஆகியவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த கலையைக் காப்பாற்ற, சினிமாவை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான ஒன்றைச் செய்ய ஒன்றிணைவோம்’ என தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…