நடிகர் விஷால் நடத்தி வரும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன். இவர் போலீசாரிடம் ரம்யா என்கிற பெண் 45 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஆபிஸ் கணக்கில் இருந்து கையாடல் செய்துவிட்டதாக புகாரளித்தார்.
இந்த புகார் குறித்து ரம்யா கூறிபோது ஹரியால் தமக்கும், தமது குடும்பத்தினர் அனைவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று கூறினார்.
மேலும் தான் எந்தவித கையாடலும் செய்யவில்லை என்றும், பொது இடத்தில் வைத்து சரியான கணக்குகளை ஒப்படைக்க நான் தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷாலின் மேனேஜர் ஹரி கிருஷ்ணனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஹரிகிருஷ்ணன் வீட்டின் முன் அவரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த நிலையில் மர்ம நபர்களால் அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்நிலையத்தில் ஹரி புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ வீட்டில் கொள்ளை அடிக்க முயலும் இளைஞராக தனுஷ் நடித்திருக்கும் இந்த படம், ஒரு கிராமத்து ஹீஸ்ட் திரில்லராக தொடங்குகிறது.…
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர்.…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில்…
2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம்…
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ்…
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து…