viral-news-about-nadigar-sangam
சென்னையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது . அந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கி இருந்தார். மேலும் அந்நிகழ்ச்சியில் பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், மனோபாலா, பசுபதி, சோனியா, பிரசன்னா, நந்தா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அந்நிகழ்ச்சியில் நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடங்குவது, கட்டிட நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள் . மேலும் இந்நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் மற்றும் நடிகராக திகழும் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோரை நடிகர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்களை நடிகர் சங்கம் செயற்குழு பாராட்டுகளைத் தெரிவித்து நினைவு சின்னம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர், நடிகர் சங்க கட்டிடதிற்கு நிதியாக சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கினார்கள். இந்த தகவல் தற்போது வைரலாகியுள்ளது.
முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…