Vijay Sethupathi met Chief Minister Rangasamy in person and made the request
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் விஜய் சேதுபதி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் சினிமா படப்பிடிப்புக்கு முன்பு ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ.28 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
எனவே புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.
சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…
திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…
சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…
Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…