veera dheera sooran part-2 movie review
மதுரையில் தன் மனைவி துஷாரா மற்றும் குழந்தைகளுடன் மளிகை கடை நடத்தி வருகிறார் கதாநாயகனான விக்ரம். இவர் இதற்கு முன் பெரிய ரவுடியான ப்ருத்வி கேங்கில் முக்கிய நபராக இருந்து சண்டையெல்லாம் வேண்டாம் என மளிகை கடை நடத்தி வருகிறார். மறுபக்கம் காவல் அதிகாரியான எஸ்.ஜே சூர்யா கேங்ஸ்டராக இருக்கும் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் அவரது தந்தை ப்ருதிவியை என்கவுண்டர் செய்வதற்காக முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் சுராஜை காப்பாத்துவதற்காக எஸ்.ஜே சூர்யாவை கொல்வதற்கு ப்ருத்வி நடிகர் விக்ரமின் உதவியை அணுகிறார். ஆனால் முதலில் விக்ரம் இதற்கு ஒத்துக்க மறுக்கிறார். பின் பிருத்வி மிகவும் கெஞ்சி கேட்டப்பிறகு இதற்கு சம்மதிக்கிறார்.ஓர் இரவில் விக்ரம் எஸ்.ஜே சூர்யாவை கொள்வதற்கு திட்டம் போட.. சுராஜை கொல்வதற்கு எஸ்.ஜே சூர்யா திட்டம் போட.. அடுத்து என்ன ஆனது? உண்மையில் விக்ரம் யார்? விக்ரமின் பின்னணி என்ன? எஸ்.ஜே சூர்யாவிற்கும் சுராஜ் குழுவிற்கும் என்ன பகை? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனான சீயான் விக்ரம் நேச்சுரல் Subtle – ஆன நடிப்பை மிகவும் ரசிக்கும்படியாக நடித்துள்ளார். கதாநாயகியான துஷாரா விஜயன் கொடுத்த கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு அவருக்கென உரிய பாணியில் நடித்து கலக்கியுள்ளார். எஸ். ஜே சூர்யா அவரது வில்லத்தனத்தை காட்டி மிரட்டியுள்ளார். குறிப்பாக சீயான் விக்ரம் ஆக்ஷட் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.
ஓர் இரவில் முன்னாள் பகையை தீர்க்கும் கதையாக இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.யு அருண்குமார். கதை தொடக்கத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தியுள்ளது படத்தின் பெரிய பலம். இதுவரை நாம் பார்த்திராத பரிமானத்தை நடிகர்களின் நடிப்பை திரையில் கொண்டு வர முயற்சித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்தது போல் அமைந்துள்ளது.
ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். விக்ரமின் பிஜிஎம்-ற்கு திரையரங்குகள் அதிருகிறது.
பெரும்பாலான திரைப்படத்தின் காட்சிகள் இரவில் நடப்பதால் மிகவும் தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். குறிப்பாக ௧௬ நிமிட சிங்கிள் ஷாட் காட்சி அற்புதம் பார்க்கும் போது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
HR Pictures நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…
இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…