ரசிகர்களால் அன்போடு தளபதி என்று அழைக்கப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமன் இசையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் வாரிசு திரைப்படம் குறித்து இப்படத்தின் இயக்குனரான வம்சி படைப்பள்ளி நேர்காணல் ஒன்றில் விஜய் குறித்து நெகிழ்ச்சி பொங்க சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் அவர், விஜய் சார யாராலும் அடிச்சுக்க முடியாது, அவரு அந்த உயரத்துல இருக்காருன்னா அதுக்கு பின்னாடி அவ்வளவு விஷயம் இருக்கு. பேஷன், நேர்மை, ஒழுக்கம் இந்த மூன்றும் ஒருத்தர்கிட்ட இருந்தா அவர யாராலும் அடிச்சுக்க முடியாது. விஜய் சார் அப்படியானவர் தான் என்று நெகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய் மிகச்சிறந்த மனிதர் என்றும் கூறியிருக்கிறார்.
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…