vamsi-shared-interesting-information-about-vijay
தெலுங்கு திரை உலகில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வம்சி படைப்பள்ளி. இவர் தற்போது இளைய தளபதி விஜய் வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வாரிசு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
தில் ராஜு தயாரிப்பு தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதையை விஜயிடன் சொன்ன போது நடந்த சுவாரஸ்ய தகவலை பற்றி வம்சி ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், விஜயை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன். அவரே என்னை வரவேற்று உபசரித்தார். தொடர்ந்து கதை கூற தொடங்கினேன்.ஒரு இடத்தில் கூட பேசாமல் முழு கதையை பொறுமையாக கேட்டார். இடையில் எனக்கு பயத்தில் வியர்க்க துவங்கியது. இதை கூட கவனித்த விஜய் ஏசியை அதிகரித்தார். கிளைமேக்ஸ் வரை சொல்லி முடித்தேன். சில நொடிகள் சத்தமே இல்லை. பின்னர் குரலை கணைத்துக்கொண்டு சரி பண்லாம் என சுருக்கமாக முடித்துக் கொண்டார். அதுவே பெரிய ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்தது எனக் கூறி இருக்கிறார் வம்சி.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…