கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் திரிஷா மற்று வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2008-ஆம் ஆண்டு இப்படம் தமிழில் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில், தனுஷ், நயன்தாரா, ரகுவரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே
இதனிடையே, கடந்த 2013-ம் ஆண்டு செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பின்னர் ‘ஆடவாரி மாடலருக்கு அர்தாலே வேறுலே’ திரைப்படத்தைப் பார்த்தேன். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இரண்டாம் பாகம் எடுக்கவும் தயார்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் செல்வராகவனின் ட்வீட்டுக்கு நடிகை த்ரிஷா ‘நான் ரெடி’ என பதிலளித்துள்ளார். இந்தபதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர்…
72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் 2026–2029 காலத்திற்கான தேர்தல் இன்று சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில்…
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…