இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததில்லை என்று படக்குழு கூறியுள்ளது
யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கே.வி.என்.நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு வெளியாகும் யாஷ் நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மார்ச் 19-ந்தேதி இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து நயன்தாராவின் லுக் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் கங்கா என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.
இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்ததில்லை என்கிறது படக்குழு. மேலும், இப்படத்தில் அவருடைய நடிப்பே ஒரு வலுவான அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நயன்தாரா கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் தெரிவிக்கையில், ‘நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைப்பட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் ’டாக்ஸிக்’ படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்திய உள்ளார்.
அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்’ என தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, ஹூமா குரோஷி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…