தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.
தல அஜித் எப்போதும் படங்களில் நடிப்பதோடு சரி வேறு எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அரசியல் சார்ந்த எந்த நிகழ்வு பற்றியும் கருத்து தெரிவிப்பதில்லை என்பதில் இன்று வரை உறுதியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே அஜித்தின் பிரதிநிதி என்ற பெயரில் சில தேவையற்ற வேலைகள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அஜித் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தனிநபர் ஆதாயத்திற்காகவும் அரசியல் கட்சிகளோ என்னுடைய பெயரை பயன்படுத்தக்கூடாது. என்னுடைய பிரதிநிதி சுரேஷ் சந்திரா மட்டுமே வேறு யாரும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி தொழில் ரீதியாகவோ அல்லது வர்த்தக ரீதியாகவோ யாராவது உங்களை அணுகினால் உடனடியாக சுரேஷ் சந்திரா அவர்களுக்கு தகவல் கொடுக்கவும். என்னுடைய பிரதிநிதி என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகளுக்கு ஒருபோதும் நான் பொறுப்பாக மாட்டேன்.
அனைவரும் கவனமாக செயல்படுங்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…