தமிழ்க்குடிமகன் திரை விமர்சனம்

ஆதிக்கச்சாதியினர் நிரம்பியிருக்கும் கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிக் காரியம் செய்யும் ஒரே குடும்பமாக சேரனின் குடும்பம் இருக்கிறது. மனைவி, மகன், அம்மா, தங்கை என வாழும் சேரனுக்கு தனது குலத்தொழிலைச் செய்ய துளியும் விருப்பமில்லை. இவர் அரசு வேலையில் சேர வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், ஆதிக்கச்சாதியினர் அவரை தேர்வு எழுத விடாமல் தடுக்கின்றனர். இந்த நிலையில் ஊர்த்தலைவர் லாலின் மகனுக்கும், சேரனின் தங்கைக்கும் காதல் வருகிறது. அந்தக் காதலில் சில பிரச்சினைகள் எழுகிறது. மேலும் லாலின் அப்பா இறந்து போகிறார். அவருக்கு இறுதிக் காரியங்கள் செய்ய சேரன் அழைக்கப்படுகிறார். ஆனால், சேரன் இனி நான் அந்தத் தொழிலைச் செய்வதில்லை எனச் சொல்லுகிறார். இதனால் பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் சேரன் குலத் தொழிலை மீண்டும் தொடங்கினாரா? சேரனுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் சேரன், தனக்கே உரிய பாணியில் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். தன் இன மக்கள் ஒடுக்கப்படுவதையும், முன்னேறவிடாமல் தடுக்க படுவதையும் உணர்வு பூர்வமாக நடிப்பால் கடத்த முயற்சி செய்து இருக்கிறார். நாயகி பிரியா ஜோவிற்கு பெரியதாக வேலை இல்லை. வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் லால். அருள்தாஸின் நடிப்பும் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளது. எஸ்.பி.யாக வரும் சுரேஷ் காமாட்சி நடிப்பில் கவர்ந்து இருக்கிறார். படத்தின் முக்கியமான திருப்புமுனை காட்சியில் வருகிறார்.

வக்கீலாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். தன் குல தொழிலை மாற்ற நினைக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரின் வாழ்க்கையை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். சிறந்த கதையை எடுத்த இயக்குனர், திரைக்கதையில் தெளிவில்லாமல் இயக்கி இருக்கிறார்.

பெரிய நடிகர்களை வைத்து சரியாக கையாள தவறி இருக்கிறார். காட்சிகளின் தொடர்ச்சி இல்லாமல் திரைக்கதை இருப்பது படத்திற்கு பலவீனம். பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலமாக படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் தமிழ்க் குடிமகன் – கொஞ்சம் நல்லவன்.

tamil kudimagan movie review
jothika lakshu

Recent Posts

ரோபோ ஷங்கர் மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்.!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…

1 hour ago

ரோபோ ஷங்கர் உடல் பாதிப்படைய காரணம் என்ன தெரியுமா? பிரபல நடிகர் சொன்ன விஷயம்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…

2 hours ago

கிருஷ் பாட்டி சொன்ன வார்த்தை, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

2 hours ago

சுந்தரவல்லி கேட்ட கேள்வி,சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…

4 hours ago

உடல் நலக்குறைவால் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்..!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…

4 hours ago

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

19 hours ago