Suseenthiran about Nidhhi Agerwal
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’. இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனிடையே ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வால் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் வந்த இயக்குனர் சுசீந்திரன் ‘சிம்பு மாமா ஐ லவ் யூனு சொல்லு’ என்று கூறிக்கொண்டே இருந்தார். இருப்பினும் நிதி அகர்வால் கடைசி வரை அவ்வாறு கூறவில்லை.
சுசீந்திரனின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் பலர் சுசீந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஒரு நடிகையை இப்படி கட்டாயப்படுத்துவது, அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஆடியோ ரிலீஸ் விழாவில் நிதி அகர்வாலை நான் சர்ச்சைக்குரிய வகையில் பேச வைத்ததாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி ஐ லவ் யூ என்று சொல்லி காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நிதி அகர்வால் நடித்துள்ளார். இதை வைத்துதான் நான் ஆடியோ ரிலீஸ் விழாவில் அப்படி சொல்ல சொன்னேன். நிறைய பேர் அதை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்’ என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.
அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…