தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது தங்குவா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44, என அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்.
இதற்கிடையில் பாலிவுட் சினிமாவில் கர்ணன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். புறநானூறு படம் பற்றிய அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளி போய்க்கொண்டே வருகிறது. இப்படி அந்த நிலையில் தற்போது இதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தின் பிரிப் ப்ரொடக்சன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்படுவதால் படப்பிடிப்புக்கு தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி தற்போது உள்ள கதையை அப்படியே எடுத்தால் 3 மணி நேரத்திற்கு மேலாக வரும் என்பதால் இதனை இரண்டு பாகங்களாக எடுத்தால்தான் சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இதற்கான கதையை உருவாக்குவதற்கே கால தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…