நந்தினி சொன்ன வார்த்தை, திருடர்களால் வந்த சத்தம், மூன்று முடிச்சு சீரியலின் ப்ரோமோ வீடியோ இதோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரியல் ஒரு அழகான கிராமத்து கதை கதைகளத்துடன் உருவாகியுள்ளது.

நேற்று ஒளிபரப்பாகிய இந்த சீரியலில், தலைமுறை தலைமுறையாக அய்யனார் கோவிலுக்கு குதிரை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார் ஹீரோயின் நந்தினி.

குதிரையுடன் நந்தினி வந்து இறங்க அனைவரும் கையெடுத்து கும்பிட்டு வணங்குகின்றனர். பூஜையை முடித்துவிட்டு அப்பாவுடன் கிளம்பிய நந்தினி, அப்பா கறி சாப்பிட ஆசைப்பட, கறி வாங்க சென்ற இடத்தில் தோழியை சந்திக்கிறார்.

அங்கு வந்த ஆடு ஒன்றைப் பார்த்து அந்த ஆட்டை பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். கடைக்காரர் ஏனென்று கேட்க அந்த ஆடு மாசமாக இருப்பதாக சொல்லி வாங்கிச் செல்கிறார்.

மறுபக்கம் அவரின் அப்பா கறிக்காக ஆசை ஆசையாய் மசாலா அரைத்துக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆட்டோடு வரும் நந்தினியை பார்த்து சகோதரிகள் இருவரும் சந்தோஷப்படுகின்றன. அம்மாச்சி எங்க என்று கேட்க நீ இல்லனா அவங்க எங்க இருப்பாங்க என்று சொல்கின்றனர்.

உடனே நந்தினி ஒரு வீட்டுக்குள் செல்ல அங்கு அம்மாச்சி ஜாலியாக பாட்டு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அங்கே வந்த நந்தினி இது நம்மளோட ஓனர் வீடு அவங்க வரும்போது நம்ம வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளணும் எத்தனை வாட்டி சொன்னாலும் ஏன் உனக்கு புரியல என்று பாட்டியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.

கறி இல்லை என்ற கோபத்தில் டீக்கடைக்கு சென்ற நந்தினியின் அப்பா டீக்கடைக்காரரை கலாய்க்கிறார். அந்த நேரம் பார்த்து துபாயிலிருந்து வருவதாக என்று கொடுக்கிறார் சிங்கப்பூர் தீபன். நந்தினியின் அப்பாவை மாமா என்று கூப்பிட்டு நந்தினி பற்றி விசாரிக்கிறார். நந்தினி வயலில் இருப்பதாக சொல்லுகிறார்.

வயலில் நந்தினி டிராக்டர் வைத்து ஏர் ஒட்டிக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து சிலர் நந்தினி கீழே பாரு என்று சொல்ல நந்தினி ஷாக்காகி வண்டியை நிறுத்துகிறார். அத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவில், நம்ம சாப்பிடணும் என்பதற்காக அப்பா எத்தனை நாள் கஷ்டப்பட்டு இருக்காரு தெரியுமா என்று தங்கைகளிடம் சொல்கிறார்.

மறுபக்கம் அம்மாச்சி நந்தினி இடம் உங்க அம்மா போலவே இருக்க என்று சொல்ல, எல்லோரும் தூங்கும் நேரத்தில் தோட்டத்திற்கு தேங்காய் திருடுகின்றனர்.

சத்தம் கேட்டு வந்த நந்தினி அவர்களை கண்டுபிடிப்பாரா? என்ன செய்யப் போகிறார் என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

கிராமத்து சூழலில் வாழும் ஒரு அழகான குடும்ப கதையை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாகி வருகிறது.


sun tv moondru mudichu serial promo video
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

7 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

7 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

8 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

8 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

8 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago