நந்தினி சொன்ன வார்த்தை, திருடர்களால் வந்த சத்தம், மூன்று முடிச்சு சீரியலின் ப்ரோமோ வீடியோ இதோ

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரியல் ஒரு அழகான கிராமத்து கதை கதைகளத்துடன் உருவாகியுள்ளது.

நேற்று ஒளிபரப்பாகிய இந்த சீரியலில், தலைமுறை தலைமுறையாக அய்யனார் கோவிலுக்கு குதிரை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார் ஹீரோயின் நந்தினி.

குதிரையுடன் நந்தினி வந்து இறங்க அனைவரும் கையெடுத்து கும்பிட்டு வணங்குகின்றனர். பூஜையை முடித்துவிட்டு அப்பாவுடன் கிளம்பிய நந்தினி, அப்பா கறி சாப்பிட ஆசைப்பட, கறி வாங்க சென்ற இடத்தில் தோழியை சந்திக்கிறார்.

அங்கு வந்த ஆடு ஒன்றைப் பார்த்து அந்த ஆட்டை பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். கடைக்காரர் ஏனென்று கேட்க அந்த ஆடு மாசமாக இருப்பதாக சொல்லி வாங்கிச் செல்கிறார்.

மறுபக்கம் அவரின் அப்பா கறிக்காக ஆசை ஆசையாய் மசாலா அரைத்துக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆட்டோடு வரும் நந்தினியை பார்த்து சகோதரிகள் இருவரும் சந்தோஷப்படுகின்றன. அம்மாச்சி எங்க என்று கேட்க நீ இல்லனா அவங்க எங்க இருப்பாங்க என்று சொல்கின்றனர்.

உடனே நந்தினி ஒரு வீட்டுக்குள் செல்ல அங்கு அம்மாச்சி ஜாலியாக பாட்டு கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அங்கே வந்த நந்தினி இது நம்மளோட ஓனர் வீடு அவங்க வரும்போது நம்ம வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளணும் எத்தனை வாட்டி சொன்னாலும் ஏன் உனக்கு புரியல என்று பாட்டியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்கிறார்.

கறி இல்லை என்ற கோபத்தில் டீக்கடைக்கு சென்ற நந்தினியின் அப்பா டீக்கடைக்காரரை கலாய்க்கிறார். அந்த நேரம் பார்த்து துபாயிலிருந்து வருவதாக என்று கொடுக்கிறார் சிங்கப்பூர் தீபன். நந்தினியின் அப்பாவை மாமா என்று கூப்பிட்டு நந்தினி பற்றி விசாரிக்கிறார். நந்தினி வயலில் இருப்பதாக சொல்லுகிறார்.

வயலில் நந்தினி டிராக்டர் வைத்து ஏர் ஒட்டிக்கொண்டு இருக்க, அந்த நேரம் பார்த்து சிலர் நந்தினி கீழே பாரு என்று சொல்ல நந்தினி ஷாக்காகி வண்டியை நிறுத்துகிறார். அத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவில், நம்ம சாப்பிடணும் என்பதற்காக அப்பா எத்தனை நாள் கஷ்டப்பட்டு இருக்காரு தெரியுமா என்று தங்கைகளிடம் சொல்கிறார்.

மறுபக்கம் அம்மாச்சி நந்தினி இடம் உங்க அம்மா போலவே இருக்க என்று சொல்ல, எல்லோரும் தூங்கும் நேரத்தில் தோட்டத்திற்கு தேங்காய் திருடுகின்றனர்.

சத்தம் கேட்டு வந்த நந்தினி அவர்களை கண்டுபிடிப்பாரா? என்ன செய்யப் போகிறார் என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

கிராமத்து சூழலில் வாழும் ஒரு அழகான குடும்ப கதையை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாகி வருகிறது.


sun tv moondru mudichu serial promo video
jothika lakshu

Recent Posts

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவனம் கவர்ந்த மிருணாள் தாக்கூர் – பூஜா ஹெக்டே!

இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…

15 hours ago

குடும்பத்துடன் பாங்காங்கில் விடுமுறையை கொண்டாடும் ஸ்ரீகாந்த்… வைரலாகும் புகைப்படங்கள்!

‘ரோஜா கூட்டம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘போஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

15 hours ago

“என் குடும்பம்” என ஆர்த்தி குடும்பத்துடன் புகைப்படம் பகிர்ந்த குஷ்பு… இணையத்தில் வைரல்!

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி 2009ஆம் ஆண்டு குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஏற்பட்ட கருத்து…

15 hours ago

இரட்டை கொண்டாட்டத்திற்கு ரெடி ஆகும் விஜய் ரசிகர்கள்!

எச். வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் வெளியீடாக…

15 hours ago

‘சேயோன்’ படத்துக்குப் பிறகு புதிய கூட்டணியில் சிவகார்த்திகேயன்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ‘சேயோன்’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக்…

15 hours ago

Hellallallo Video

Hellallallo Video | Peddi (TAMIL) | Ram Charan | Buchi Babu | Shruthi Haasan |…

2 days ago