soundarya-rajinikanth-police-complaint
இந்திய திரை உலகில் அசைக்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, சௌந்தர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி காணாமல் போனதாக புகார் கொடுத்துள்ளார். அதன்படி அவர் அளித்திருக்கும் அந்தப் புகாரில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றபோது தனது காரின் சாவி காணாமல் போனதாக குறிப்பிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது வீட்டில் நகைகள் கொள்ளை போனதாக அளித்திருந்த புகார் வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைய மகள் அளித்திருக்கும் புகாரின் தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…