“எம்ஜிஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக்கொண்டிருந்தவர்”: சிவகுமார் இரங்கல்

“90-களில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். இதையடுத்து நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், \”தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டிருந்தவர்..

ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர்.நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை கலைநிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். ‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்.. கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்\” என்று குறிப்பிட்டுள்ளார்.”,

sivakumar-condoles-vijayakanth
jothika lakshu

Recent Posts

கருப்பு திரை விமர்சனம்

90களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் KTV-யில் அடிக்கடி ஒளிபரப்பான அம்மன் படங்களை பார்த்த நினைவுகள் இன்னும் பலருக்கும் இருக்கும். அந்த…

2 hours ago

“ரவி மோகனின் வாழ்க்கையை நான் கெடுத்தேனா?” – கண்ணீருடன் விளக்கம் அளித்த கெனிஷா

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…

2 hours ago

பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் ‘பேங் பேங்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேங் பேங்’ (Bang Bang) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

2 hours ago

அர்ஜுன் – அபிராமி நடித்துள்ள ‘ப்ளாஸ்ட்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள…

2 hours ago

“நான் இல்லாமல் போனாலும் என் பாடல்கள் என்றும் வாழும்” – இளையராஜா

தமிழ் திரையுலகின் இசைச் சக்கரவர்த்தியான இளையராஜா, 1976ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு அரை…

2 hours ago

அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் ‘கருப்பு’ படத்தை கொண்டாடிய படக்குழு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது.…

2 hours ago