முத்து சொன்ன வார்த்தை, சீதாவின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார் செட்டில் முத்து செல்வத்திடம் சீதா நல்ல இடத்தில கல்யாணம் பண்ணி கொடுக்கணும் கண்டிப்பா இந்த அருணுக்கு மட்டும் கொடுக்கக் கூடாது அன்னைக்கு நான் சட்டைய புடிச்சதுக்காக இப்ப வரைக்கும் என்ன பழி வாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்க ஆள் கிட்ட எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். அவ சின்ன பொண்ணு அவ என்ன என்னமோ பேசி ஏமாற்றி வச்சிருக்கான் கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா சந்தோஷமா வைத்திருக்க மாட்டான் ஒரு நல்ல பெரிய இடமா பாத்து சீதாவை கல்யாணம் பண்ணி கொடுக்கணும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் முத்து காரில் வர எதிரில் அருண் பைக்கில் வருகிறார்.

இருவரும் நேருக்கு நேராக நிற்க அருண் முத்துவை பின்னால் போக சொல்ல என்னால் போக முடியாது நீ தான் போகணும் என்று சொல்லுகிறார் இருவரும் முறைத்துக் கொண்டே நிற்க கொஞ்ச நேரத்தில் முத்துவின் கார் பின்னால் டிராபிக் ஆகிவிடுகிறது அந்த நேரம் பார்த்து சீதா ஆட்டோவில் வர டிராபிக் இருப்பதை கவனித்து முன்னால் வந்து பார்க்க அருண் இருப்பதால் அவரிடம் சைகை காட்டி பின்னால் போக சொல்ல அவரும் சொல்கிறார். பிறகு முத்து காரை எடுத்துக்கொண்டு முன்னால் போக சீதா வருகிறார். நான் டிராப் பண்றேன்னு சொல்ல இல்ல மாமா நான் ஆட்டோவில் வந்தேன் போறேன் என்று சொல்ல ஆட்டோ வந்து நிற்கிறது அவரும் சென்று விடுகிறார்.

மறுபக்கம் மீனா சந்திராவை சந்தித்து சீதா விஷயம் பற்றி பேச அதற்கு அவர் எனக்கும் என் பொண்ணு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசை இல்லையா அவ பாட்டு வேலைக்கு போறா வாரா எதுவுமே பேச மாட்டீங்களா எனக்கு கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் சீதா ரூமில் அழுது கொண்டிருக்கிறார். மீனா அவளுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தத காலம் பூரா சந்தோஷமா இருப்பா என்று சொல்ல இப்ப கூட எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை மாப்பிள்ளை சம்மதிக்காமல் எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும் என்று கேட்க அவங்க ரெண்டு பேரும் வீம்புக்குன்னு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க இவரோ சும்மா இல்ல அவரோட வண்டிய லாக் பண்ணி சஸ்பெண்ட் பண்ண வச்சிருக்காரு என்று சொல்லுகிறார். எதுவா இருந்தாலும் சீதா வாழ்க்கை யோசித்து உன் வாழ்க்கையை விற்ற கூடாது.

என் ரெண்டு பொண்ணுங்களே சந்தோஷமா இருக்கணும் சோ சீதாவோட கல்யாணத்தை யோசிச்சு உன்னோட வாழ்க்கையில பிரச்சனை வரத்தை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் மாப்பிள்ளை எந்த நேரத்துல என்ன முடிவு எடுப்பார் என்று தெரியாது என்று சொல்லுகிறார். விஜயா டான்ஸ் சொல்லிக்கொடுத்து கொண்டு இருக்க ரதி தடுக்கி விழ அந்தப் பையன் தாங்கி பிடிக்க விஜயா நீ எதுக்கு அவளை புடிச்சுகிட்டு இருக்க என்று சொல்லி இதோடு போதும் என சொல்லி அனுப்பி வைக்கிறனர். கொஞ்ச நேரம் கழித்து விஜயா பார்வதியிடம் ரோகிணி வாங்கி கொடுத்த நகையை காட்ட அப்ப கோபம் போயிடுச்சா என்று கேட்க கோபாம் போகல அவர் இப்படியே வாங்கி கொடுத்தா வாங்கி வைத்திருப்பேன் அது ஒரு நல்லது தானே என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் சிந்தாமணி வந்து என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயா பதில் என்ன?அருணை சந்தித்து சீதா என்ன பேசுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Ennamo Sonneenga Perusa Lyrical Video

Ennamo Sonneenga Perusa Lyrical Video | James Vasanthan, Gaana Shiva | Dushy, Janany Kunaseelan

9 hours ago

Kaathaaga Vaazhaporen Lyrical Video

Kaathaaga Vaazhaporen Lyrical Video | Magudam | Vishal | GV Prakash | Dushara

9 hours ago

Seppu Sela Video Song

Seppu Sela Video Song | Ram in Leela | Rio Raj | Vartika | Ankit…

9 hours ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: நடிகை ஜியா சங்கருக்கு நிச்சயதார்த்தம்!

'காதல் ரீசெட் ரிப்பீட்' மற்றும் மராத்தி திரைப்படமான 'வேத்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஜியா சங்கர், தனது நிச்சயதார்த்தத்தை…

9 hours ago

இதனால் தான் ‘மக்கள் காவலன்’ கதையை தேர்வு செய்தேன் – நடிகர் மணிகண்டன்

'பைசன் காளமாடன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமாக 'மக்கள்…

9 hours ago

‘ராமாயணா’ திரைப்படம் நவம்பர் 6-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது!

இந்துக்களின் முக்கிய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘ராமாயணா’. இதில்…

9 hours ago