siragadikkaasai serial episode update 20-12-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மகேஸ்வரி வீட்டில் சந்தித்த மீனா நீ தான் கிரிஷ் ஓட அம்மா ஆவி உன்னோடு உடம்பில் வந்த மாதிரி நடிச்சு அவரை ஏமாத்திக்கிட்டு இருக்க அப்படித்தானே என்று கேட்க இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ரோகினி கேட்கிறார் உன் கூட சேர்ந்து எனக்கும் இப்படி யோசிக்க தோணுச்சு என்று சொல்லுகிறார் உன்னால இப்போ இந்த வீட்ல ஏதோ ஒரு பிரச்சனை இருக்குன்னு மாமா யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு ஏற்கனவே நானே என் புருஷன் கிட்ட உண்மையை மறைச்சுகிட்டு குற்ற உணர்ச்சியில் இருக்க இப்போ மாமா உங்க அம்மாவுக்கு போன் பண்ணி விசாரிக்க சொல்றாரு இப்ப அவர் கிட்ட போய் நான் ஒரு பொய் சொல்லணும் அவர் முகத்தை கூட என்னால நேரில் பார்க்க முடியல உன்னால எப்படி பொய் சொல்லிக்கிட்டு இருக்க முடியுது என்று கேட்கிறார்.
நானே என்னோட வாழ்க்கையை காப்பாத்திக்குறதுக்காக போராடிக் கிட்டு இருக்கிறேன் என்று சொல்லுகிறார் நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ தெரியாது ஆனா இதே மாதிரி என்னால ரொம்ப நாள் மறைக்க முடியாது கண்டிப்பா நான் உண்மையை சொல்லிடுவேன் அதுக்குள்ள நீயே சொல்லிட்டு என்று மிரட்டி விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ரோகினி இவ வேற ஒரு பக்கம் என்னை மிரட்டிக்கிட்டு இருக்கா என்று சொல்ல மகேஸ்வரி இப்படியே போனால் மீனா கண்டிப்பா உண்மையை சொல்லிடுவாங்க என்று சொல்ல என் தலையெழுத்து அப்படித்தான் இருந்தா என்ன பண்ண முடியும் என்று ரோகினி சொல்லுகிறார். மறுபக்கம் பார்வதி வீட்டில் விஜயா சிந்தாமணி மூவரும் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார். அவரிடம் நீ எதுக்காக டாடின்னு கூப்பிடறதுக்கு ஒத்துக்கிட்ட என்று சொல்ல மனோஜ் உண்மையை சொல்ல போகும் நேரத்தில் ரோகினி பேயாக மிரட்டியதை நினைவில் வைத்துக்கொண்டு உங்களுடன் நல்லதுக்கு தான் என்று சொல்லுகிறார்.
மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க மனோஜ் ஒரே பதிலையே சொல்ல விஜயா கடுப்பாகி மனோஜ் அனுப்பிவிடுகிறார் கொஞ்ச நேரத்தில் சிவன் பார்வதி வந்து சந்தித்து டிக்கெட் புக் ஆயிடுச்சு என்று சொல்ல என்ன பார்வதி எங்கேயாவது ஊருக்கு போறியா என்று கேட்கிறார். ஊருக்குப் போகப் போறோம் கதை சொல்ற ப்ரோக்ராமை வெளியே எடுத்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு அதனால ரெண்டு பேரும் ஊட்டிக்கு பத்து நாள் போகப் போறோம் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார் உடனே பார்வதியை தனியாக அழைத்துச் சென்று இனி எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கோபப்பட நாங்க அங்க போயிட்டு தனித்தனியாக ரூம்ல இருந்துட்டு ஷூட் பண்ணிட்டு வரப்போறான் அவ்வளவு தானே என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். உடனே சிந்தாமணி விஜயாவிடம் பார்வதிக்கு ஒரு பையன் இருக்காங்கல்ல அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லிடு இதுதான் கரெக்டா இருக்கும் என்று சொல்ல விஜயாவும் சரி என சம்மதிக்கிறார். மறுபக்கம் வீட்டில் மனோஜ் வேலை பார்த்துக் கொண்டிருக்க அண்ணாமலை வேலையை பற்றி விசாரிக்கிறார் விஜயா மனோஜை பாராட்டி பேசிக்கொண்டிருக்க முத்துவும் மீனாவும் கிரிசை அழைத்துக் கொண்டு வருகின்றனர் உடனே விஜயா நீ என்னது நெனச்சுக்கிட்டு இருக்க ஏற்கனவே பூ கற்றது சுத்திட்டு வர இப்பயும் லேட்டா வர என்று கேள்வி கேட்கிறார்.
கொஞ்ச நேரத்தில் க்ரிஷ் ரிப்போர்ட் கார்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து மனோஜிடம் கையெழுத்து கேட்க உடனே விஜயா அவன் எதுக்கு போடணும் என்று கேட்கிறார் ஏதோ பேச்சுக்கு டாடினு கூப்பிட சொன்னா இதெல்லாம் செய்ய சொல்றியா என்று திட்ட மனோஜம் கையெழுத்து போட மறுக்கிறார் முத்து நான் போறேன் என்று சொல்ல வேண்டாம் எனக்கு டாடி தான் போடணும் என்று சொல்லுகிறார் விஜயா கோபத்தில் ரிப்போர்ட் காடை தூக்கி வீசிறி அடித்து விட்டு அதெல்லாம் போடமாட்டான் என்று சொல்லிவிடு மனோஜ் ரூமுக்கு சென்று விடுகிறார் உடனே ரோகினி கல்யாணி ஆவி வந்தது போல என் பையன் வீட்டை விட்டு போகணுமா உனக்கு கையெழுத்து போட முடியாதா என்று மிரட்ட உடனே மனோஜ் ஓடி வந்து கையெழுத்து போட்டுவிட்டு சென்று விடுகிறார் உடனே விஜயா இந்த வீட்ல என்னதான் நடக்குதுன்னு தெரியல என்று குழம்பி போய் சென்று விடுகிறார். பிறகு முத்து முத்து சந்தேகம் வந்து கேள்வி மேல் கேள்வியை மீனாவிடம் கேட்க அதற்கு மீனா என்ன சொல்லி சமாளிக்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…