siragadikkaaasai serial episode update 31-12-25
தமிழ் சின்னத்திரைஇல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் சொத்தை பிரித்து கேட்டதால் அண்ணாமலை வக்கீல் மற்றும் அவரது நண்பர் பரசுவை வரவைக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் இருக்க முத்து எதுக்காக போய் சொத்து பிரிக்க முடிவு பண்ண இதுல எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார் உடனே விஜயா நீங்க இந்த வீட்டை இருக்கிறவங்களுக்கு எல்லாம் பிடிச்சு கொடுக்காதீங்க என்று சொல்லுகிறார்.
அப்படி கொடுத்துட்டா கடைசியா என்ன எல்லாம் வேலையே துரத்தி விட்டுருவாங்க என்று சொல்ல அண்ணாமலை நான் இந்த வீட்ட பிரிச்சு கொடுக்க முடிவு எடுக்கல விஜயா இது உங்க அப்பா உனக்காக கொடுத்த வீடு கடைசியா என் பேர சேர்த்து எழுதிட்டாரு அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு எங்க அம்மா எனக்காக கொடுத்த சொத்துல தான் நான் இவங்களுக்கு பிரிச்சு கொடுக்க முடிவெடுத்து இருக்கேன் என்று சொல்ல விஜயா அமைதியாகிவிடுகிறாய். மனோஜை தவிர மற்ற அனைவரும் சொத்தை வைக்க வேண்டாம் என்று சொல்ல மனோஜ் ஏன் இப்படி பேசி ஏன் நீங்கள் எடுத்துட்டு போயிடலாம்னு பாக்குறீங்களா என்று சொல்ல முத்து மற்றும் மனோஜிடையே சண்டை உருவாகிறது. வக்கீல் இதை பார்த்துவிட்டு பிரச்சனை பெருசா இருக்கும் போல எல்லாரும் சம்மதம் தெரிவித்த பிறகு சொத்தைப்பத்தி பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு பரசுவும் வக்கீலும் சென்று விடுகின்றனர்.
உடனே அண்ணாமலை வருத்தப்பட்டு உட்கார இந்த நேரம் எனக்கு கண்ணதாசன் பாட்டு தான் ஞாபகம் வருது நீ அந்த பாட்டு பாடு முத்து என்று சொல்ல முத்து வேண்டாம் என சொல்லுகிறார் எனக்காக பாடு என்று சொல்ல முத்து தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரை என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளை கண்கலங்கி கொண்டே பாடுகிறார். நான் இத மனோஜ்க்காக செய்யல இத எப்பவும் செஞ்சிருக்கணும் அவன் கேட்கிற மாதிரி நான் தான் வச்சிருக்க கூடாது இப்ப வக்கீல கூட்டிட்டு வந்தா இப்பயும் சண்டை நடக்குது இதுக்கு மேல நான் என்னதான் பண்றது என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் மீனா விஜயாவுக்கு காபி கொடுக்க இது யாருக்கு என்று கேட்கிறார் மாமாவுக்கு என்று சொல்ல அவர் ரூம்ல இல்லை என்று சொல்லுகிறார். காலையிலேயே நான் கோலம் போடும் போது கேட்டு வந்திருந்தது அவர் அப்பயே வாக்கிங் போயிட்டாருன்னு நினைச்சேன் இன்னுமா வரல என்று சொல்ல முத்து வந்தவுடன் அண்ணாமலை இல்லாத விஷயத்தை சொல்லி கேட்டுகின்றன உடனே முத்து மொட்டை மாடி என அனைத்திலும் தேடிவிட்டு எல்லாம் இவனால தான் என்று மனோஜை மீண்டும் அடிக்க போக மீனா சாமி கும்பிட பூஜை ரூமுக்கு போகிறார் அப்போது லெட்டர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா அதை எடுத்துக் கொண்டு வந்து அனைவரும் முன்னிலையிலும் படிக்கிறார். என்னை யாரும் தேடாதீங்க நான் பத்திரமா தான் இருப்பேன் எனக்கே தோணும்போது நான் திரும்பி வரேன் என்று சொல்லிவிட்டு அண்ணாமலை சென்று இருப்பது அனைவரையும் அனைவரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
உடனே விஜயா உன்னால தாண்டா நீ வாங்குன கடனுக்காக அவர் சொத்தை கேட்டா அவர் என்னடா பண்ணுவாரு நீங்க என்ன பண்ணுவீங்களோ எது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது அவரு கை கால விழுந்தாவது அவர வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க என்று சொல்ல முத்துவும் ரவியும் தேடப் போக மனோஜ் ரூமுக்குள் சென்று விடுகிறார். உடனே ரோகினி மனோஜிடம் கேள்வி கேட்க இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது மனோஜ் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணி பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Pattampoochi Lyric Video | Vishwanath and Sons | Suriya, Mamitha Baiju | G.V. Prakash |…
Magaraasi Video Song | Gatta Kusthi 2 | Vishnu Vishal | Zara Zyanna | Chella…
I,Nobody Trailer - Tamil | Prithviraj Sukumaran| Parvathy Thiruvothu| Nisam Basheer| Jakes Bejoy
Veera Veera Lyric Video | Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions
பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவருமான ராஜு ஜெயமோகன், தற்போது…
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்தடுத்த திரைப்படத் திட்டங்களால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில், மதுரையை பின்னணியாகக் கொண்டு புதுமுகங்கள்…