SiragadikkaAasai Serial Episode Update
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனா வேணா இந்த வீட்ல இருக்கட்டும் ஆனா அவங்க குடும்பம் இங்கே வரக்கூடாது என்று சொல்ல மீனா அது எப்படி அத்தை என்ன பாக்க வரக்கூடாதுன்னு சொல்ல முடியும் எங்க அம்மாவும் தங்கச்சியும் என்ன பண்ணாங்க என்று கேட்க உடனே விஜயா அவங்க ரெண்டு பேரும் வந்து என்னோட கழுத்துல என்ன இருக்குன்னு பாத்துட்டு போயிட்டு அவன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம் அவன் வந்து என் நகையை திருடிட்டு போகவா என்று சொல்ல அண்ணாமலை சொந்தக்காரங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லக்கூடாது என்று சொல்ல கொஞ்ச நேரம் கழித்து வரட்டும் என வீட்டுக்குள்ள வரக்கூடாது என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை இடம் உங்க அம்மா வீட்டுல போய் உட்கார்ந்துகிறேன் என்று சொன்னீர்களாமே என்று கேட்க உடனே அவர் முத்துவை திரும்பிப் பார்க்கிறார் அது மட்டும் இல்லாம டைவர்ஸ் கொடுக்குறேன்னு சொன்னீங்களாமே என்று கேட்க என்ன பண்ண முடியும் விட்டுட்டு போனா அது தான் பண்ணனும் என்று சொல்லி சமாளிக்க அனைவரும் கிளம்புகின்றனர் மீனா விஜயா மற்றும் அண்ணாமலைக்கு காபி போட்டுட்டு வரேன் என்று சொல்லி உள்ளே போகிறார்.
முத்துவும் மீனாவும் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு கண்ணதாசன் பாட்டை பாடி ஜாலியாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து மீனா நம்ம வாங்கின கடனை அடைப்பதற்கு என்ன பண்றது என்று யோசிக்க முத்து நைட்டு பகலும் கார் ஓட்ட வேண்டியதுதான் என்று சொல்லுகிறார். ஆனால் மீனா அப்படியெல்லாம் தேவையில்லை நீங்க என்கூட இருக்கணும் என்று சொல்லுகிறார். என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சொல்லி மண்டபத்துக்கு பூ டெக்கரேஷன் பண்ற ஆர்டர் எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்காக கொஞ்சம் டெக்கரேஷன் பண்ணி போட்டோஸ் எடுத்து வச்சு தெரிந்து மண்டபத்துல கேட்டு பாக்க போறேன் என்று சொல்ல முத்து சூப்பர் ஐடியா மீனா பண்ணலாம் உனக்கு எந்த உதவி வேணாலும் கேளு பண்றேன் என்று சொல்லுகிறார்.
மறுநாள் விஜயா எந்த காரணத்திற்காக வீட்டிற்கு வந்தார் என்பதை தெரிந்து கொள்ள ரோகிணி பார்வதியின் வீட்டிற்கு வருகிறார். பார்வதியை நலம் விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு பக்கத்தில் கிளையன்ட் பாக்க வந்த அப்படியே, நீங்க எப்படி இருக்கீங்க நான் பாக்க வந்தேன் என்று சொல்லி ஏன் ஆன்ட்டி டென்ஷனா இருக்கீங்க என்று கேட்கிறார், உங்க அத்தை அவ டென்ஷன் எல்லாம் எனக்கு கொடுத்துட்டு போயிட்டா என்று சொல்ல, நாம் என்ன உங்களுக்கு மசாஜ் பண்ணி விடவா என்று என்று சொல்ல , உங்க அத்தை திட்டுவா,அதனால் நான் சொல்ல மாட்டேன் வாங்க பண்ணிவிடுகிறேன் என்று சொல்லி மசாஜ் செய்ய உட்கார வைத்து இருக்கிறார். ஆன்ட்டி வரவே மாட்டேன்னு சொன்னாங்க எப்படி வந்தாங்க மீனா குடும்பத்து மேல அவ்ளோ கோபமா பேசநாங்க என்று சொல்ல, பார்வதி உண்மையை உளறி விடுகிறார் உடனே சொல்ல முடியாமல் பார்வதி முழிக்க ஏன் என்கிட்ட சொல்ல மாட்டீங்களா இல்ல விஜயா யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி இருக்கா என்று சொல்ல அவங்க எப்படியும் என்கிட்ட சொல்லுவாங்க என்று சொல்ல, வழக்கறிஞர் 2 லட்சம் இருக்கும் கொடுத்ததை ரோகினிடம் சொல்லி விடுகிறார். இருந்தாலும் இத நம்பவே முடியல ஆன்டி எப்படி இப்படி பண்ணுவாங்க அதனால ஏத்துக்கவே முடியல என்று சொல்ல உடனே பார்வதி அவரை அழைத்துக்கொண்டு 2 லட்சம் என்கிட்ட தான் கொடுத்து வச்சிருக்கான் இங்க பாரு என்று பணத்தை காட்டுகிறார். பிறகு ரோகிணி அங்கிருந்து கிளம்ப பார்வதி நான் சொன்னேன்னு உங்க அத்தை கிட்ட சொல்லிடாத என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் மீனா டெக்கரேஷன் செய்த மாடல்களை காட்ட முத்துவுக்கு கண்ணை கட்டி கூட்டி வருகிறார். முத்து டெக்கரேஷனைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.
முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…