பார்வதி வீட்டுக்குச் சென்ற முத்து, ரவி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருனிடம் நீங்க கொடுத்த பணம் தொலைந்து போச்சு மன்னிச்சிடுங்க நான் எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல இதில் உன் மேலேயும் தப்பில்லை உன் அக்கா மேலயும் தப்பில்ல எதுக்கு சீதா மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்க எந்த இடத்துல தொலைஞ்சது சொல்லு நான் விசாரிக்க சொல்றேன் வேணாங்க ஏற்கனவே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க எங்க மாமாவும் தேடிக்கிட்டு தான் இருக்காரு நீங்க ட்ரைனிங் நல்லபடியா முடிச்சுட்டு வாங்க என்று சொல்ல அப்படி எல்லாம் உன் மேல அக்கறை இல்லாம இருக்க முடியாது சீதா என்று சொல்லி விட்டு இன்னைக்கு அம்மாவுக்கு செக்கப் இருக்குல்ல என்ற சொல்ல நானே மறந்தாலும் நீ மறக்க மாட்ட போல என்று சொல்ல சரி நான் பாத்துக்குறேன் நீங்க முடிச்சுட்டு வாங்க என்று சொல்லி சீதா போனை வைக்கிறார்.

மறுபக்கம் முத்து பார்வதி வீட்டுக்கு வந்து அழுகிறார். மீனாவுக்கு இப்படி ஆயிடுச்சே அத்தை கஷ்டபட்டு சீதா சேர்த்து வெச்சா சீட்டு பணம் அதுவும் இல்லாம அவ பிரண்டு கிட்ட இருந்து வாங்கி கொடுத்தா மீனா சாப்பிடாம அழுதுகிட்டே இருக்கா அத்தை என்று அழுவது போல் ஆக்டிங் கொடுக்க பார்வதியும் ஆறுதல் சொல்லுகிறார். யாரோ பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க அந்த சிந்தாமணி தான் இப்படி எல்லாம் பண்ணி இருப்பாங்க என்று முத்து ஆரம்பிக்க உடனே பார்வதி ஆமா உங்கள தான் இருக்கும் தொழில் போட்டி காரணமா இப்படி பண்ணி இருப்பாங்க என்று சொல்லுகிறார்.

இதுக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும் என்று கேட்க என்ன பண்ணனும் முத்து சொல்லு என சொல்லுகிறார். நாங்க அந்த பணத்தை சிந்தாமணி வீட்டுல இருந்து எடுக்கப் போறோம் அதுக்காக நீங்க சிந்தாமணியை நாளைக்கு ஒரு மூணு மணி நேரம் உங்க வீட்ல வச்சிருக்கணும் என்று சொல்ல அது எப்படிப்பா முடியும் டான்ஸ் கிளாஸ்சும் இல்லை என்று சொல்ல நீங்க ஏதாவது ஒரு பூஜை வைத்து இருக்கான்னு சொல்லுங்க அந்த பூஜைல கலந்துகிட்ட பணம் கொட்டோ கொட்டோன்னு கொட்டோ என சொல்லுங்க உடனே வந்துருவாங்க என்று சொல்லுகிறார் சரிப்பா இதுல உனக்கு எதுவும் பிரச்சனை வந்துவிட அதுல என்று சொல்ல எனக்கெல்லாம் வராது அத்தை நான் பாத்துக்குறேன் எனக்காக இந்த ஒரு உதவி மட்டும் பண்ணுங்க என்று மீண்டும் அழுது ஆக்டிங் போட பார்வதி ஒத்துக் கொள்கிறார்.

வெளியில் வந்த முத்து நம்ம நெனச்ச மாதிரி தான் பார்வதி அத்தையும் சொல்றாங்க இது அந்த சிந்தாமணி ஓட வேலை தான் என்று சொல்ல செல்வம் இப்ப என்ன பண்ண போற முத்து என்று கேட்க எனக்கு ஒரு பிளான் இருக்கு நான் உனக்கு அப்புறம் சொல்றேன் என அழைத்துச் சென்று விடுகிறார் மீனா ஸ்கூட்டியில் வந்து கொண்டிருக்க ஒரு ஆட்டோ டிரைவர் கைபோட்டு நிறுத்துகிறார். நாங்கதான் உங்களை நிறுத்துவோம் நீங்க எங்கள நிறுத்திக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க இல்லம்மா ஒரு சவாரி கூட்டிட்டு வந்தேன் அவங்க ஹாஸ்பிடல் போகணும் ஆட்டோ பாதியிலேயே ஸ்டார்ட் ஆகல அதுக்காக ஆட்டோ பார்த்தால் எதுவும் நிக்க மாட்டேங்குறாங்க அவங்கள கொஞ்சம் ட்ராப் பண்ணிடுவீங்களா என்று சொல்ல பண்ணிவிட்டேன் என்று சொல்ல ஆட்டோக்காரர் கூப்பிடுகிறார். யார் என்று பார்த்தால் அது அருண் அம்மா. உடனே மீனாவுக்கு அவர்களை தெரியாததால் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று விடுகிறார் வெளியில் சீதா காத்துக்கொண்டிருக்கிறார் மீனாவுடன் வருவதை பார்க்கிறார் உடனே அருண் அம்மா சீதாவிடம் இந்த பொண்ணு தான் என்ன கூட்டிட்டு வந்தாங்க என்று சொல்லி மீனாவை அறிமுகப்படுத்த சீதாவை பற்றியும் மீனா விட அறிமுகப்படுத்துகிறார் உடனே சீதா நான் எனக்கு ஒரு அக்கா இருக்காங்கன்னு சொன்னேன்ல அது இவங்க தான் மண்டபம் டெக்ரேசன் பண்றாங்க என்று சொல்லுகிறார். உடனே அருன் அம்மா உங்க குடும்பத்துல எல்லாருமே மத்தவங்களுக்கு உதவுற மனப்பான்மை இருக்கு உங்க அம்மா அப்பா நல்லா வளர்த்திருக்காங்க என்று சொல்ல சீதா ஒரு நர்சிடம் சொல்லி உள்ளே அழைத்துச் செல்ல சொல்லுகிறார். உடனே மீனா சீதாவிடம் என்ன ஓவர் அக்கறையா இருக்கு நீ இவ்ளோ தூரம் எல்லாம் பண்ண மாட்டியே வெளிய வந்து கூட்டிட்டு போற அளவுக்கு என்ன விஷயம் என்று கேட்க அது ஒன்னும் இல்லக்கா நான் ஒருத்தரை உனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணேன்னு சொன்ன இல்ல அவங்களோட அம்மா என்று சொல்ல உன் மாமியாரா என்று கேட்க என்ன அக்கா இப்படி கேட்கிறார் என்று சொல்லவும் மாமியாராக போறவங்க தானே என்று சொல்லுகிறார்.

நல்ல கேரக்டரா தான் இருக்காங்க என்று மீனா சொல்ல, ஆமாக்கா என் மேல அன்பா பாசமா இருக்காங்க என்று சொல்லுகிறார் உனக்காவது இது மாதிரி ஒரு மாமியார் கிடைச்சிருக்கு என்ன மாதிரி இல்லாம யார் மேல கோவம் இருந்தாலும் டெய்லி என்ன புடிச்சிருந்தா திட்டிக்கிட்டு இருப்பாங்க என்று சொல்லுகிறார் சரி சீதா நீ போய் பாத்துக்கோ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் முத்து ரவி மற்றும் சுருதியை மேலே கூப்பிட்டு இருக்கிறார் அவர்கள் அந்த உடன் என்ன விஷயம் என்று கேட்க செல்வம் வந்துட்டும் சொல்ல செல்வம் வந்தவுடன் என்ன விஷயம் என்று கேட்கிறார் நாளைக்கு நம்ம இன்கம் டேக்ஸ் ஆபிஸரா மாரி ஒரு வீட்டில போய் ஆராய்ச்சி பண்ண போறோம் என்று சொல்ல ஆராய்ச்சியா என்று ரவி கேட்கிறார். அது க்ரைம் என்று ரவி சொல்ல, முத்துவின் திட்டம் என்ன? அதற்கு ரவி,ஸ்ருதி சம்மதிக்கிறார்களா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 26-04-25
jothika lakshu

Recent Posts

Muthe Video Song

Muthe Video Song | Singha | Kayal Chandran | Sijaa Rose | Meenakshi Raveendran |…

1 day ago

Nova Trailer

Nova – Phase 1: The Arrival - Trailer | Raiza Wilson | Dhurva | Sendrayan…

1 day ago

Karuppa Kooda Va Lyric Video

Karuppa Kooda Va Lyric Video | Karuppu | Suriya | RJ Balaji | @SaiAbhyankkar |…

1 day ago

மொரிஷியஸுக்கு சென்ற ஹன்சிகா

கோடை வெயில் கடுமையாக வாட்டி வரும் நிலையில், பல பிரபலங்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் கடற்கரை தீவுகளுக்கு சுற்றுலா செல்ல…

1 day ago

கருப்பு படத்தில் ‘ப்ரீத்தி’யாக த்ரிஷா!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “கருப்பு” மீது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு…

1 day ago

நடிகை சிம்ரன் அடுத்த பட அப்டேட் வெளியிட்ட விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக உச்சத்தில் விளங்கியவர் சிம்ரன். ‘வாலி’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஜோடி’, ‘ப்ரியமானவளே’, ‘பஞ்சதந்திரம்’…

1 day ago