விஜயா சொன்ன வார்த்தை, அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய தொழில் தொடங்கியுள்ளதால் அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் அவரும் ஆசீர்வாதம் செய்து முடிக்க உடனே ஒரு போன் வருகிறது அதில் உங்க பொக்கே பார்த்த ரொம்ப சூப்பரா இருந்தது எனக்கு ரெண்டு பொக்கே வேணும் என்ன ரேட் என்று கேட்க 500 ரூபா 1000 ரூபாய் என இரண்டு விதமாக செஞ்சி தரதா மீனா சொல்ல போ பெரிசுலையே எனக்கு ரெண்டு செஞ்சு கொடுத்திடுங்க நான் உங்களுக்கு 2000 ரூபாய் காசு அனுப்பிட்டு இருக்கேன் என சொல்ல மீனாவும் சந்தோஷமாக கண்டிப்பா செஞ்சு தந்த சார் என்று சொல்லுகிறார். முத்து இப்பதானே நீ பொக்கே காமிச்சா அதுக்குள்ளார எப்படி தெரிஞ்சது என்று சொல்ல நான் தான் என்னோட ஐடியில் அந்த பொக்கே போட்டு நம்பர் போட்டு விட்டேன் என்று சொல்லுகிறார் உடனே ரவியும் 500 ரூபாய் கொடுத்து எனக்கு ஒரு சின்ன பொக்கே ரெடி பண்ணி குடுங்க என்று சொல்ல மீனா காசு வாங்க மறுக்கிறார் ஆனால் ஸ்ருதி ரவி கிட்ட இருந்து காசு வரதே பெருசு வாங்கி வச்சுக்கோங்க என்று சொல்லி வாங்கி கையில் கொடுக்கிறார்.

மீனா அந்த ஆர்டரை எடுத்துக்கொண்டு போய் அந்த நபரிடம் கொடுக்க அவர் போனில் பார்த்ததைவிட நேரில் சூப்பராக இருப்பதாக பாராட்டுகிறார் இன்னொரு ரிட்டயர்மென்ட் பங்க்ஷன் ஒன்னு இருக்கு அன்னைக்கு நாலு தேவைப்படும் என்று சொல்ல நீங்க ஆன்லைன்ல கூட ஆர்டர் பண்ணிக்கலாம் சார் நான் கரெக்டா எடுத்துட்டு வந்து விடுவேன் என்று சொல்ல சரிமா என்று சொல்லுகிறார். மீனா ஆர்டர் கொடுத்துவிட்டு வரும் வழியில் அருண் மற்றும் சீதா வண்டியில் வருவதை கவனித்து இருவரும் பேசிக்கொள்கின்றனர் என்னக்கா இந்த பக்கம் என்று கேட்க ப்ரூட் பொக்கே ஆர்டர் இருந்தது அதை கொடுக்க வந்தேன் என்று சொல்ல ஆமாக்கா நல்ல ஐடியா சுருதி போட்டு இருந்தாங்க நானும் பார்த்தேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க அருண் ஆமாங்க உங்க பிசினஸ்ல நீங்க வளர்ந்து கொண்டே போறீங்க உங்க வீட்டுக்காரர் முத்து மாதிரி இல்லாம நீங்க ரொம்ப நல்ல ஐடியாவா யோசிச்சு இருக்கீங்க என்று சொல்ல மீனாவின் முகம் மாறுகிறது டிரைவர் எல்லாம் என்ன பண்ண போறாங்க அதே கஷ்டமா இருக்கு அது வாழ்க்கை அவ்வளவுதான் அதுல என்ன முன்னேற்றம் இருக்க போகுது என்று முத்துவை தாழ்த்தி பேச மீனா முதல்ல அவரு கார் டிரைவரா தான் இருந்தாரு இப்போ அவர் சொந்தமா ரெண்டு கார் வச்சிருக்கார் இதுக்கு மேலயும் சொல்ல மாட்டேன் டிராவல்ஸ் வைக்கும் அளவுக்கு அவர் உயர்ந்து வருவாரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே சீதா இப்ப எதுக்கு நீங்க எங்களோட மாமா வேலைய பத்தி கேக்குறீங்க டிரைவர இருந்து எங்க மாமா நல்லா தான் சம்பாதிக்கிறார் என்று சொல்லி அழைத்துச் சென்று விடுகிறார்.

வீட்டுக்கு வந்த மீனா வருமானத்தை எண்ணி பார்த்துக் கொண்டிருக்க முத்து வருகிறார் என்ன மீனா கலெக்ஷன் பார்த்துக்கிட்டு இருக்கியா என்று கேட்க ஆமாங்க இன்னைக்கு எவ்வளவு லாபம் வந்துச்சுன்னு பார்த்துட்டு இருக்க என்று சொல்ல அப்ப நானும் கரெக்டான சமயத்தில் தான் இதை வாங்கி இருக்கேன் என சொல்லி உண்டியலை கொடுக்கிறார். பிறகு அதில் மீனா சம்பாதித்ததே முத்துவோ முத்து சம்பாதித்த பணத்தை மீனாவும் மாற்றி மாற்றி உண்டியலில் போட்டுவிட்டு அடுத்த வருஷம் நேத்திக்கு நம்ம தனியா ரூம் கட்டிய அதுல இருப்போம் என சொல்லி முத்து மீனாவின் பக்கத்தில் போக விஜயா வந்து யாரும் இல்லையா என்று கேட்க இருவரும் அமைதியாகி விடுகின்றனர் பிறகு ஹாலில் வந்து வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார். என்ன விஷயம் என்று அண்ணாமலை கேட்க நாளைக்கு எல்லோரும் பார்வதி வீட்டுக்கு வரணும் என்று சொல்லக்கூடாது என்ன விஷயத்துக்காக என்று கேட்க ரத்த தானம் கொடுக்கறதுக்கு என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். மனோஜ் மட்டும் உனக்கு சப்போர்ட் பண்ண வர நான் ரத்தம் கொடுக்க மாட்டேன் ஏற்கனவே எனக்கு கம்மியா தான் இருக்கு என்று சொல்ல முத்துவும் மீனாவும் வரும் என்று சொல்ல ரவி ஸ்ருதியும் வர சம்மதிக்கின்றனர் பிறகு விஜயா எல்லாரும் வாங்க நான் பண்ற ரத்ததான முகாம்ல என் குடும்பத்தில் இருக்கிறவங்களை கலந்துக்கலாமா என்ன என்ன நினைப்பாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.முத்து அண்ணாமலை இடம் அம்மாவுக்கு என்ன ஆச்சுப்பா மரம் நடறாங்க அன்னதானம் போடுறாங்க இப்போ ரத்த தான முகாம் நடத்துறாங்க என்று சொன்ன எனக்கே ஆச்சரியமா தான் இருக்குது ஆனா காரியம் இல்லாம எதுவும் செய்ய மாட்டான் என்று சொல்ல அதை நான் கண்டுபிடிக்கிறேன் என முத்து நினைக்கிறார்.

மறுநாள் காலையில் பார்வதி வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் செய்ய விஜயாவின் குடும்பத்தினரும் அங்கு இருக்கின்றனர் பிறகு ஒரு கேமரா மேன் வந்துவிட விஜயா ஆரம்பிச்சு விடலாமா என்று சொல்லி அவர்களை அழைத்துச் செல்கிறார். முதலில் விஜயா ரத்தம் கொடுத்து ஆரம்பித்து வைக்க பிறகு குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்?விஜயா என்ன பேசுகிறார்? அதற்கு அவர்களின் ரியாக்ஷன் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 24-09-25
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

3 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

3 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

3 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

3 days ago