siragadikkaaasai serial episode update 23-20-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா பார்த்துக் கொள்வதாக சொல்ல சீதா மறுபக்கம் நான்தான் கூட்டிட்டு போய் பாப்பேன் என சொல்லுகிறார் என்ன செய்வது என புரியாமல் இருக்க முத்து சீதாவே பார்த்துக்கட்டும் மீனா இப்போதைக்கு அத்தை சரியாகட்டும் என்று சொல்ல உங்களுக்கு ஓகே தான் அத்தை என்று கேட்கிறார். சரிங்க மாப்ள என்ன சந்திரா சொல்லுகிறார். ஆனால் மீனா அமைதியாக வெளியில் வந்து விட முத்து வந்து பேசுகிறார். என்கிட்ட கேக்காம எதுக்கு அவங்க வீட்ல இருக்கா சம்மதிச்சீங்க இதே பழைய சீதாவா இருந்தா நான் எது சொன்னாலும் சரிகா சொல்லி இருப்பா அவ வீம்புக்கு பேசும்போது நீங்க எதுக்கு விட்டு கொடுத்தீங்க என்று கேட்க இப்போதைக்கு நீங்க சண்டை போட்டுட்டு இருக்கும்போது உங்க அம்மாவோட முகமே மாறிடுச்சு நான் இது மாதிரி சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்க கொஞ்சம் தெளிவா நாங்க அதுவும் இல்லாம உங்க அம்மா சீதா வீட்டுல தங்கும் போது உன் மேல இருக்கிற கோபமும் கொஞ்சம் குறையும் நான் வேணும்னா அருண் கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல நீ உங்க மேல எந்த தப்பும் இல்லை நீங்க யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க கூடாது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் ஸ்ருதி ஹோட்டலில் வேலையாட்கள் மூன்று பேர் நின்று விட்டதாக சொல்ல இது திடீர்னு இந்த மாதிரி இருக்கே என்று சொல்ல உடனே செஃப் ஆமா மேடம் அந்த நீத்து அதிக காசுக்கு அவர்களை அங்க வேலைக்கு வச்சு இருக்காங்க என்று சொல்ல உடனே சுருதி என் புருஷன் வந்து ஹெல்ப் பண்ணாத அப்பவே நான் தைரியமா தான் ரெஸ்டாரன்ட் ரன் பண்ணிக்கிட்டு இருக்கேன் நான் பார்த்துக்கிறேன் என சொல்லி பார்ட் டைம் ஜாப் இருக்கு விளம்பரம் கொடுக்கிறார். அதேபோல் இரண்டு காலேஜ் படிக்கும் நபர்கள் வந்து வேலைக்கு வருகின்றனர். பிறகு செஃப் கூப்பிட்டு இவங்களுக்கு எப்படி பண்ணனும்னு சொல்லி கொடுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் மீனா கால் வலியில் இருக்க விஜயா வந்து சமைக்கலையா வீடு துடைக்கலையா என்று கேட்க முத்து உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா என்று கேட்கிறார். இப்ப என்ன உங்களுக்கு தர துடைக்கணும் அவ்வளவு தானே நானே செய்கிறேன் என்று சொல்ல இதெல்லாம் எங்க உருப்பட போகுது என்று சொல்லுகிறார்.
சீதாவின் ஹாஸ்பிடலில் ஐந்து லட்சம் பணத்தை கொடுத்து பேக்கில் கட்டச் சொல்லி அனுப்புகின்றனர். அப்போது செக்யூரிட்டிக்கு ஒரு போன் வருகிறது அவரது மனைவி போன் பண்ணி குழந்தையை நாய் கடித்து விட்டதாகவும் ஹாஸ்பிடல் இருக்க அழைத்துச் செல்ல போவதாகவும் சொல்ல செக்யூரிட்டி பதட்டமாக பேசுகிறார் உடனே சீதா என்ன விஷயம் என்று கேட்டுவிட்டு அவரிடம் சீதாவின் பணத்தை கொடுத்து குழந்தையை பார்க்கச் சொல்லி அனுப்பி விடுகிறார் கொஞ்ச நேரத்தில் ஆட்டோவில் போகும் போது திருடர்கள் வந்து சீதா விடாமல் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடும் மீனா வந்து என்ன விஷயம் என்று கேட்கிறார் ஆட்டோக்காரர் நடந்த விஷயத்தை சொல்ல சீதாவிடம் உன் மேல எந்த தப்பும் இல்லல்ல பார்த்து பேசிக்கலாம் நீங்க முதல்ல ஹாஸ்பிடலுக்கு போங்க என்று சொல்லிவிட்டு மீனா பின்னாலையே வருகிறார். மேனேஜர் சீதாவை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் நான் இதுக்கு மேனேஜ்மென்ட் என்ன பதில் சொல்லுங்க இனிமே எங்க வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லி திட்டுகிறார்.
பிறகு மீனா மேனேஜரிடம் என்ன பேசுகிறார்? அதற்கு அவர் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…