SiragadikkaAasai Serial Episode Update 17-06-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாமி இடம் பதிவு திருமணம் செய்யலாம் செய்ய வேண்டாம் என சீட்டு எழுதி கையில் வைக்க சீதா வந்தவுடன் அதனை குலுக்கி போட்டு எடுக்க சொல்லுகிறார் அதில் பதிவு செய்யலாம் என்று வந்துவிட மீனா நான் உங்களுடைய ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி சம்மதிக்கிறேன் என்று சொன்னவுடன் சீதா சந்தோஷப்படுகிறார் ரொம்ப நன்றி அக்கா என்று சொல்ல உங்க மாமாவும் மீறி இது பண்றது எனக்கு கஷ்டமா இருக்கு ஆனா நீ அப்பா இருந்தா என் ஆசையை நிறைவேற்றி இருப்பாரே என்று சொன்ன அதனாலதான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கேன் என்று சொல்லிவிட்டு அருண் கிட்ட விஷயத்தை சொல்லிடு என்று சொல்லுகிறார்.
சீதாவும் சந்தோஷத்தில் வேகமாக ஓடி வந்து அருணுக்கு போன் போட்டு சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார். சீதா அம்மா கிட்ட சொல்லிடலாமா என்று கேட்க மீனா அவங்க மாமாவ எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டேங்க இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கின்றன மறுபக்கம் முத்து சவாரிக்கு ஒருவரை கூட்டி வர அவர் பணம் கொடுக்காமல் வேகமாக ஓட சூட்டிங் ஸ்பாட் நடக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார். பின்னாலேயே ஓடி வந்த முத்துவை ஒருவர் தடுத்து நிறுத்த அவர் காசு கொடுக்காமல் வந்துவிட்டார் என்று சொல்லு அவர் அப்படித்தான் நிக்காம வந்துருவாரு நான் காசு வாங்கிட்டு வரேன்னு இங்க உக்காரு என்று சொல்லிவிட்டு போக அந்த நேரம் பார்த்து எமதர்மராஜா வேஷம் போட்ட ஒருவர் டயலாக்ஸ் சரியாக பேசாமல் இருக்கிறார்.
உடனே முத்து அவரிடம் சென்று ஈஸியான டயலாக் தானே இருக்கு எதுக்கு பேச மாட்டேங்கிறீங்க இரண்டு வாட்டி சொன்னா கத்துக்க போறாரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ பேசுவியா என்று சொல்லி அவரிடம் டயலாக் சொல்லுகின்றன. மீனா அருணை சந்தித்து பேச ரொம்ப சந்தோஷம் என்று அருண் சொல்ல,நீங்க எதுக்கு சொன்னீங்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்ல, இப்ப கூட என் புருஷனுக்கு தெரியாம இது பண்றது எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு என்று சொன்னா உடனே அவர் முத்துவை பற்றி பேச வர அவர பத்தி தப்பா பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு அவர் பக்கம் நியாயமும் நேர்மையும் இருக்கு நீங்க எந்த விதத்திலே தப்பு பண்ணலையா அந்த வயசான தாத்தா பாட்டிய ரோட்ல தள்ளி விட்டிங்க அது இல்லாம அவர் மேல தேவையில்லாத கேஸ் எல்லாம் போட்டீங்க இப்போ அவர் செஞ்ச உதவிக்கு நீங்க செஞ்ச மாதிரி பண்ணிங்க சீதா லவ் பண்ணாத ஒரே காரணத்துக்காக மட்டும் தான் நான் எதுக்காக சம்மதிக்கிற சீதா வாழ்க்கையில் நான் சந்தோஷமா இருக்கணும்.
நீங்க அவ்வளவு சந்தோஷமா பாத்துப்பீங்க என்று நம்புகிறேன் என்று சொல்ல நான் கண்டிப்பா சீதாவும் நல்லா பார்த்துப்பேன் என்று சொல்ல மீனா நீங்க சீதாவை லவ் பண்ணாம பொண்ணு கேட்டு வந்து இருந்தீங்கன்னா நான் உங்களுக்கு கொடுத்திருக்கவே மாட்டேன் அது உறுதி என்று சொல்லிவிட்டு இதை வச்சு என் புருஷன் ஜெயிச்சுட்டு தான் நினைக்காதீங்க என்றும் சொல்லிவிட்டு செல்கிறார்.
மறுபக்கம் மனோஜ் ரூமில் எங்க அம்மாக்கு இதுல பெருசா நம்பிக்கை இல்லைன்னு தோணுது என்று சொல்ல இல்ல ஆண்ட்டி கண்டிப்பா சிவப்பு கலர் போடுவதா கட்டியிருப்பாங்க என்று ரோகினி உறுதியாக சொல்ல கதவை திறந்து பார்க்க விஜயா வேற கலர் புடவை கட்டிக் கொண்டிருக்கிறார். உடனே விஜயா மனோஜை சாப்பிட கூப்பிட அனைவரும் சாப்பிட உட்காரா ரோகிணி உட்காரும் போது நீ மீனா கூட பரிமாறு என்று சொல்ல அனைவரும் சாப்பிடுகின்றனர். அந்த நேரம் பார்த்து வாசலில் சிரிக்கும் சத்தம் கேட்டு விஜயா பதறுகிறார். பிறகு என்ன நடக்கிறது? விஜயா என்ன செய்கிறார் ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Kara Official Trailer | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari K. Ganesh…
THEEYOR KOODAM Official Trailer | New Tamil Thriller Movie 2026
Sura Sura Song (Tamil) | Nagabandham | Virat Karrna | Nabha Natesh | Abhishek Nama…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் தமன்னா, தற்போது தமிழில் சுந்தர் சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக “புருஷன்”…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “Jailer 2” படம், ஓடிடி உரிமை ஒப்பந்தத்தில்…
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான “Love Insurance Kompany (LIK)” திரைப்படம், வசூலில் சிறப்பான…