விஜயா சொன்ன வார்த்தை, முத்து கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மீனா விளக்குக்கு அலங்காரம் செய்ய அந்த நேரம் பார்த்து ரோகினி உள்ளே வருகிறார். எங்க போயிருந்த ரோகினி என்று கேட்க ஷாப்பிங் போன ஆன்ட்டி என்று சொல்லுகிறார். வந்து விளக்கேத்து என்று சொல்ல அதற்கு முத்து எல்லாம் ஏற்பாடு மீனா விளக்கேத்த மட்டும் பார்லர் அம்மாவா என்று கேட்க இந்த வீட்டோட மூத்த மருமக அவதார் என்று சொல்லுகிறார்.

உடனே மீனா தீபம் யார் ஏற்றினாலும் எரியும். ரோகினி மீனா விடம் ஒரு தட்டு எடுத்துக்கிட்டு வாங்க என்று சொல்ல,அதில் பழங்களை வைத்து ஒரு புடவையை வைத்து விஜயாவிடம் கொடுக்கிறார்.புடவையைப் பார்த்து விஜயா சூப்பரா இருக்கு என்று சந்தோஷப்படுகிறார். உடனே முத்து அப்பாக்கு வாங்கிட்டு வரலையா என்று கேட்க இது லேடிஸ் கும்பிடற சாமி அதனால் ஆன்ட்டிக்கு மட்டும் வாங்கிட்டு வந்தேன். ஜென்ஸ் சாமி கும்பிடும் பொது அவங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வருவேன் என்று சொல்லி ரோகினி சமாளிக்கிறார். அதற்கு மீனா புருஷன் பொண்டாட்டியா இருக்கும் போது தனியா எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கக் கூடாது என்று சொல்ல உடனே விஜயா உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டவுடன் மீனா சென்று விடுகிறார்.

ரோகினி நீங்க இந்த புடவையை தான் கட்டிட்டு வரணும் இதுக்கு பிளவுஸ் கூட வாங்கிட்டு வந்துட்டேன் என்று பிளவுஸ் எடுத்துக் கொடுக்க விஜய்யா கட்டிக் கொண்டு வரேன் என்று உள்ளே செல்கிறார். அந்த நேரம் பார்த்து மீனாவுடன் பூ கட்டுபவர்கள் வருகின்றனர். அவர்களை உட்கார வைத்த மீனா பேசிக் கொண்டிருந்தபோது விஜயா வெளியே வருகிறார். பூ கட்டுபவர்கள் கொலு பொம்மையை தொட்டு பார்த்துக் கொண்டிருக்க, விஜயா உடனே அவர்களை திட்டி அசிங்கப்படுத்த அண்ணாமலை விஜயாவை அடக்குகிறார்.

உடனே விஜயா தீபாதாரணை காட்டி பூஜையை முடிக்க ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் உள்ளே சென்று ஒரு நேம் போர்டு எடுத்துக் கொண்டு வருகின்றன. அதனை விஜயா தான் திறந்து வைக்க வேண்டும் என்று சொல்லி விஜயாவை கட் பண்ண சொல்லுகின்றன.

அதில் ரோகிணி ஆன்லைன் கிளாஸ் மேக்கப் சொல்லிக் கொடுக்கப் போவதாக விஜயாவின் ஆரம்ப எழுத்து வி ஐ வைத்து ஆரம்பித்துள்ளார். உடனே முத்து அம்மாவோட ஃபுல் பேரை வச்சா செட் ஆகவில்லை என்று ஒரே எழுத்து வச்சுட்டீங்களா? என்று கிண்டல் அடிக்க உடனே மனோஜ் அப்படி எல்லாம் இல்லமா இப்பல்லாம் ஓரெழுத்து வைக்கிறது தான் ஃபேஷன் என்று சொல்லி சமாளிக்கிறார். எல்லோருக்கும் சுண்டல் கொழுக்கட்டை வைத்துக் கொடுத்த மீனா, விஜயா பூ கட்டுபவர்களை இப்படி எல்லாரும் வீட்டுக்கும் போயிட வேண்டியதுதானா சாப்பாடு கிடைக்கும் என்று நக்கலாக பேச நாங்க எல்லாம் அப்படி கிடையாது எங்க வீட்ல ஒருத்தனா தான் முத்துவையும் மீனாவையும் நாங்க நினைக்கிறோம் என்று சொல்ல விஜயா பேசாமல் உட்கார்ந்து இருக்கிறார். அவர்கள் நாங்க கிளம்புறோம் மீனா என்று சொன்ன உடனே முத்து வாங்க நடராஜ் பண்றேன் என்று சொல்லியும் பரவாயில்லை நாங்க போகிறோம் என்று அவர்கள் சொல்ல, நான் கூட்டிட்டு போறேன் என்று சொல்லுகிறார் முத்து.

விஜயா பேசிக்கொண்டே இருக்க மீனா கொழுக்கட்டைகளை விஜயாவிடம் அடுக்கி இந்தாங்க இது சாப்பிட்டுக்கிட்டே இருங்க என்று சொல்ல அப்போ நான் பேசுறது எப்படி சொல்றா பாருங்க என்று சொல்ல உடனே அண்ணாமலை என்ன மீனா அப்படி பண்ற விஜயா கடைக்கு கொழுக்கட்டை பத்தாது சிமெண்ட் வேணும் என்று சொன்ன அனைவரும் சிரிக்கின்றனர் விஜயா கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறார்.

முத்துவும் மீனாவும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டிக்கு துணி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து கொலுவிற்கு கூப்பிடுவதற்காக மொத்த ஆரம்பிக்க அவரை தடுத்து ஓரமாக கூப்பிட்டு செல்கிறார் மீனா. ஏன் என்ன ஆச்சு எதுக்கு என்னை கூப்பிடுற என்று கேட்க அவங்களை எதுக்கு குழுவுக்கு கூப்பிடுறீங்க என்று கேட்க தாத்தா பாட்டி எல்லாம் சொல்ற அப்புறம், அதுக்காக சொல்லல அவங்க எங்க அம்மா தங்கச்சி வீட்டுக்கு வந்தாலே அசிங்கப்படுத்துவாங்க அவங்களுக்கு பழகிடுச்சு ஆனா இவங்கள அது மாதிரி பேசினா தப்பா ஆயிடும். இவங்களுக்கு மரியாதை இருக்காது அதனால வேண்டாம் என்று சொல்லுகிறார் ஆனால் முத்து அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று ரெண்டு பேருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட மக்கள் அங்கு கூடி விடுகின்றனர். உடனே ஒருவர் ஒருவர் மாற்றி மாற்றி பேச இதுதான் நாலுபேர் நாலு விதமா பேசுறதா நாங்க சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம் போங்க என்று அவர்களை அனுப்பி வைக்கின்றனர். உடனே மீனா நான் சொல்றதை கேளுங்க சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு தாத்தா பாட்டி இடம் வந்து பேசிவிட்டு கிளம்புகின்றனர்.

மறுபக்கம் ரோகினி முத்துவின் போனிலிருந்து வீடியோவை எடுக்க என்ன பிளான் போடுகிறார்? அதற்கு வித்யா என்ன சொல்லுகிறார் என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

SiragadikkaAasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

இத்தாலியில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நயன்தாரா!

திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…

2 hours ago

‘அரசன்’ படத்தில் 3 வேடங்களில் சிம்பு?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…

3 hours ago

ஜூன் 5-ல் திரைக்கு வரும் ‘பரிமளா அண்ட் கோ’!

ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…

3 hours ago

மீண்டும் இணையும் ‘கற்றது தமிழ்’ கூட்டணி?

இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…

3 hours ago

‘இரட்டையர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…

3 hours ago

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவனம் கவர்ந்த மிருணாள் தாக்கூர் – பூஜா ஹெக்டே!

இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…

23 hours ago