மீனாவுக்கு தெரிந்த உண்மை, ரோகிணியை மாட்டி விட்ட சிட்டி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை அரெஸ்ட் பண்ண போலீஸ் வீட்டுக்கு வந்து விடுகின்றனர் அண்ணாமலை மீனா ரவி மூவரும் முத்துவுக்காக பேசிக் கொண்டிருக்க விஜயா அப்படித்தான் பண்ணி இருப்பான் அவனுக்காக நீங்க எதுக்கு கெஞ்சிகிட்டு இருக்கீங்க என்று சொல்ல எந்த ஒரு அம்மாவும் புள்ள தப்பு பண்ணி இருந்தாலும் அவன் பண்ணலன்னு பொய்தான் சொல்லுவாங்க ஆனால் இவங்க இவன் தான் பண்ணி இருப்பான்னு சொல்லும்போதே உங்களுக்கு தெரியலையா இவன்தான் செஞ்சி இருப்பான் என்று சொல்லி சொன்னவுடன் அண்ணாமலை உனக்காக செஞ்சான் பாரு என்று கேட்க விடுங்கப்பா அவங்க பேசட்டும் என்ன பேசணும்னு பேசட்டும் என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் வேறு வழியில்லாமல் முத்துவை அரெஸ்ட் பண்ணி சென்றுவிட போலீஸ் ஸ்டேஷனில் அருண் இருக்கிறார் உடனே முத்துவை பார்த்தவுடன் என்ன ஆச்சு சார் இவர் என்னோட ரிலேஷன் தான் என்ன பிரச்சனை என்று கேட்க ஆளுங்கள அனுப்பி ஒரு குடும்பத்தை அடிச்சிருக்காரு அதுல ஒருத்தர் சீரியஸா இருக்காரு அதனால பெரிய இடத்து கேஸ்ன்றதுனால அரெஸ்ட் பண்ணி இருப்போமென்று சொல்லுகிறார் உடனே அவர் சாதாரணமான டிரைவர் அவங்க வைப் சாதாரணமா பூ கட்டுறவங்க என்று சொல்ல அவனை முதலில் சாதாரணமா சாதாரணமா சொல்றத நிறுத்த சொல்லுங்க என்று கோபப்படுகிறார் முத்து. உடனே இவன் ஒன்னும் என்னை காப்பாத்த வேணா நான் நேர்மையான வழியில் போராடி வெளியே வந்து இருப்ப நான் எந்த தப்பும் பண்ணல என ஜெயிலுக்குள் இருந்து முத்து சொல்லுகிறார்.

உடனே வெளியே இன்ஸ்பெக்டர் இடம் வந்து அருண் பேச என்ன திருப்பியோ அந்த ஆள வெளியிடனும் கேட்க போறியா என்று கேட்க இல்லை சார் அவன் அப்படித்தான் சொந்தக்காரங்க அதனால உள்ள அப்படி பேசினால் குடிகாரன் கண்டிப்பாக ஆள வச்சு அடிச்சிருப்பா அவனுக்கு அஞ்சு வருஷமாவது ஜெயில்ல இருந்ததா தெரியும் என்று முத்துவை பற்றி போட்டுக் கொடுக்கிறார். மறுபக்கம் நீ நான் போலீஸ் இன்ஸ்பெக்டரை தேடி வீட்டுக்கு வர அவர் இல்லாததால் நேராக அருள் வீட்டுக்கு வந்து சீதாவிடம் விஷயத்தை சொல்ல கொஞ்ச நேரத்தில் அருணும் வந்து விடுகிறார். நீங்க தான் ஏதாவது ஹெல்ப் பண்ணனும் என்று கேட்க நானும் ஸ்டேஷன்ல பார்த்தேன் ஆனா அவர் மேல மர்டர் கேஸ் ஆகாம இருக்கற வரைக்கும் நல்லது அவர் உசுருக்கு ஏதாவது மாடல் பண்ணிடுவாங்க அப்புறம் ரொம்ப கஷ்டம் என சொல்ல மீனா எப்படியாவது உதவி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சீதா மீனா விடம் அவரே மாமா வெளியில் கூட்டிட்டு வருவார் என்று சொல்ல உன் புருஷன் கூட்டிட்டு வரல நாளும் என் தாலிக்காக நான் போராடுவதாக சொல்லி ரதிக்கு போன் பண்ணி வர சொல்லுகிறார்.

நடந்த விஷயங்களை ரதியிடம் சொல்லிவிட்டு தீபனிடம் அங்கு வந்த ஆளுங்களை யாராவது அடையாளம் தெரியும் என்று கேட்க சொல்லி போன் பண்ண தீபன் யோசித்து சிட்டி வேலையை முடிச்சுட்டேன் என சொன்னதாக பேசிக்கொண்டு போன விஷயத்தை சொல்ல மீனா இதை யார் பண்ணி இருப்பாங்கன்னு எனக்கு தெரிஞ்சிருச்சு இதுக்கு மேல நான் பாத்துக்குறேன் என முடிவெடுக்கிறார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு மீனாவுக்கு தெரிந்த இன்ஸ்பெக்டர் போன் பண்ணி முத்து மேல் எந்த தப்பும் இல்லை சார் மீனா கண்டுபிடிச்சு தான் சொல்றாங்க கொஞ்ச நேரம் எஃப் ஐ ஆர் போடாம வெயிட் பண்ணுங்க என்று சொல்ல மீனாவும் வந்து இருக்கிறார். சிட்டி தான் இது மாதிரி பரணி பழியை என்கிட்ட போட்டு இருக்காரு என்று சொல்ல உடனே இன்ஸ்பெக்டர் சிட்டியையும் அவர்களது ஆட்களையும் அழைத்து வரச் சொல்லுகிறார். பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சிட்டி உண்மையை ஒப்புக் கொண்டாரா? முத்து வெளியில் வந்தாரா? ரோகினி சிக்கினாரா?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

6 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

8 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

8 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

8 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

8 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

8 hours ago