முத்துவுக்கு ஆதரவாக பேசிய விஜயா, சுருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டா அப்பா என்று முத்து சொல்ல தப்புதான் என மீனா வாசலில் இருந்து சொல்லுகிறார். இப்போது நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்டேன் மன்னிப்பு கேட்க தான் வந்தேன் என்று சொல்ல மன்னிப்பெல்லாம் கிடையாது என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை காலில் விழுந்து மீனா மன்னிப்பு கேட்க அவர் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

நீ இப்படி பண்ணுவேன்னு கொஞ்சம் கூட நினைக்கலாமா என்று சொல்ல என்ன மன்னிச்சிடுங்க மாமா சீதா அருண விரும்பினால் ஆனா வீட்ல வேற ஒரு பொண்ணு பாக்குற விஷயத்தை சொன்னாங்க அதுவும் இல்லாம சீதா என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னா அப்பா இல்லாத கஷ்டத்தை இப்பதான் நான் உணர்வேன்னு சொன்னதுனால தான் இப்படி ஒரு விஷயத்தை செய்வேன் என்று சொல்ல முத்து தான் இப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான் அப்புறம் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் என்று சொல்லுகிறார். உடனே விஜயா மண்டபத்தில் அசிங்கப்பட்டு நின்னுது அவன் தானே அவன் குடும்பத்தை தலையில் வைத்து ஆடுனா என்ற முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேச ஸ்ருதி நீங்க என்ன இன்னைக்கு புதுசா முத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுறீங்க என்று கேட்கிறார். உடனே ரோகினி மனோஜ் என இருவரும் விஜயா சொல்வது போல மீனா பண்ணது தப்பு என சொல்லி சப்போர்ட் பண்ணி பேச இருவரும் மீனாவுக்கு ஆதரவாக பேசுகின்றனர். உடனே மனோஜ் நீங்க ஓடிப்போய் கல்யாணம் பண்ணதுனால சப்போர்ட்டுக்கு வரிங்களா என்று கேட்க ஓடி போறத பத்தி நீ பேசாத இன்று இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. அண்ணாமலை அதட்டியவுடன் அமைதியாகின்றனர்.

முத்து நீ மன்னிக்கலாம் பா நான் மன்னிக்க மாட்டேன் என சொல்லுகிறார். உடனே முத்து கார் டிரைவர் அவள் போலீஸ்காரனுக்கு தெரிஞ்ச ஒன்னு அசிங்கப்படுத்துறாங்க என்று சொல்ல மீனா எங்க வீட்டில யாரும் அப்படி நினைக்கல இவருதான் எங்க வீட்டுக்கு எல்லாமே என்று சொல்லுகிறார். முத்து அண்ணாமலை பக்கத்தில் கீழே உட்கார்ந்து அன்னிக்கு இவ போயிருந்த ரிஜிஸ்டர் ஆபீஸ் நானும் போனேன்பா ஆனா அப்ப கூட இவன் இப்படி பண்ணி இருப்பான்னு என் மனசு யோசிக்கல என் நம்பிக்கையே தூக்கி வாடுன பூ மாதிரி குப்பைல போட்டுட்டா இவ இங்கே இருக்கக்கூடாது போக சொல்லுங்க போ என்று சொல்ல நீனா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன் மாமா நான் போயிட்டு வரேன். நான் இல்லாம அவரால இருக்க முடியாது கண்டிப்பா என்ன வந்து கூட்டிட்டு வருவாரு என்று சொல்லி மீனா கண்கலங்கி சென்று விடுகிறார்.

மறுபக்கம் சந்திரா சீதாவிடம் பால் கொடுத்து முதலிரவிற்கு அனுப்பி வைக்கிறார். அவரும் உள்ளே வந்தவுடன் உட்கார்ந்த இருவரும் பேசுகின்றனர். மாமா ரொம்ப நல்லவரு எங்க அம்மா அவரை குடும்பத்துல மூத்த பிள்ளையா பாக்குறாங்க என்று சீதா முத்துவுக்கு ஆதரவாக பேச அருண் மனதுக்குள் முதல்ல அந்த முத்துவ இந்த குடும்பத்திலிருந்து பிரிக்கிறது தான் முதல் வேலை என்று மனதில் நினைக்கிறார்.

பிறகு மீனா வீட்டுக்கு வர சந்திரா என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaaAasai Serial Episode Update 11-07-25
jothika lakshu

Recent Posts

Bhagavan Movie Stills

[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]

2 days ago

Breakfast Movie Audio Launch

[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]

2 days ago

Light Weight Baby Title Launch

[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]

2 days ago

LIK Thanks Giving Meet

[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]

2 days ago

“நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” – திருமணம் குறித்து ரித்விகா திறந்த மனம்

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…

2 days ago

பின்னணி பாடகி Dhee இசை ஆல்பம் – ஏப்ரல் 24ல் கொழும்புவில் வெளியீடு

இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…

2 days ago