மீனாவின் மனசாட்சி சொல்லும் விஷயம்,பார்வதி சிவனைப் பார்த்து கடுப்பாகும் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குற்ற உணர்ச்சியில் இருக்க, மனோஜ்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனிலிருந்து கொண்டு ரோகினி பற்றிய உண்மை தெரிந்ததையும் உண்மையை சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லி பிளாக்மெயில் பண்ணிய விஷயத்தையும் யோசித்து கொண்டு இருக்க ரோகிணி வந்து ஆன்ட்டி காபி கேட்டாங்க மீனா என்று சொல்லுகிறார் உடனே உனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லல்ல மாமா அன்னிக்கு என்ன சொன்னாரு நம்ம மனசுக்கு பிடிச்சவங்க குடும்பத்துக்கிட்டே உண்மையை மறைக்காத விட துரோகம் வேற எதுவுமே இல்லைன்னு சொன்னாரு எனக்கு குற்ற உணர்ச்சில நான் தவிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல உடனே ரோகிணி வழக்கம்போல் நீங்க அப்படி சொன்னீங்கன்னா நானும் கிருஷ் சாகறது தவறு வேற வழியில்லை என்று சொல்ல உடனே மீனா கோபப்பட்டு என்ன என்ன பிளாக்மெயில் பண்றியா நான் உனக்காக எல்லாம் ஒன்றும் பார்க்கல கிரிஷ்க்காக மட்டும் தான் யோசிக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் உங்கள நம்புற மீனா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் பார்வதி கதை சொல்லிக் கொண்டிருக்க சிவன் வீடியோ இருக்கிறார் உடனே கதை முடிந்த பிறகு பேசிக் கொண்டிருக்க விஜயா வருகிறார். இருவரும் ஷுவ் பாருவை என்று செல்லப் பெயர் வைத்து கூப்பிட்டுக்கொள்வதை பார்த்து விஜயா கடுப்பாகிறார் உடனே சேனலுக்கு 50000 வியூஸ் வந்ததனால் அதனை கேட்டு கொண்டாடுவதற்காக சிவன் கேக்கை வாங்கிக்கொண்டு சர்ப்ரைஸ் ஆக வந்துள்ளார். உடனே யோகா கிளாசுக்கு வரும் அனைவரும் வந்துவிட பார்வதியின் கதையை பாராட்டி பேச விஜயா கடுப்பாகிறார் கொஞ்ச நேரத்தில் சிந்தாமணி அவருடைய மகளை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு யோகா கிளாசில் சேர்க்க போகும் விஷயத்தை சொல்ல பார்வதி கல்யாணம் ஆகாதவங்களெல்லாம் விஜயா சேர்க்க மாட்டார் என்று சொல்ல அதெல்லாம் பரவாயில்லை இப்பல்லாம் கல்யாணம் ஆனவங்களா தான் நம்ப முடிய மாட்டேங்குது என்று சொல்லுகிறார்.

சிந்தாமணியின் மகள் பார்வதியை பெருமையாக பேச விஜயா கடுப்பாகி அனைவரும் சென்றவுடன் சிந்தாமணி இடமே உங்களை பிரிக்கறதுக்கு ஏதாவது ஒன்னு பண்ணனும் என்று சொல்லுகிறார் மறுபக்கம் மீனாவின் மனசாட்சி வந்து உண்மையை வீட்டில் சொல்லுமாறு சொன்னார் என்னால இரண்டு உயிர் போகணுமா என்று கேட்கிறார் அவர் உண்மைக்காக சொல்லல அவள சாகமாட்டா பயத்துல மிரட்டிட்டு இருக்கா என்று சொல்ல மீண்டும் மீண்டும் மனசாட்சி வந்து மீனா குடும்பத்தை ஏமாத்துற மாதிரி இருக்கும் உன் மாமனாரும் புருஷன் நினைச்சு பாரு என்று சொல்ல ஒன்றும் தெரியாமல் மீனா தவிக்கிறார்.

மனோஜ் மற்றும் ரோகினி வந்து காண்ட்ராக்ட் விஷியத்தை பற்றி பேச வருகின்றனர் அங்கு மனோஜ் என்ன சொல்லுகிறார்?ரோகிணி என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial promo update 17-11-25
jothika lakshu

Recent Posts

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

14 hours ago

7 Star Boys Official Trailer

7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…

15 hours ago

Avengers Endgame: Encore Official Tamil Trailer

Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25

15 hours ago

டாக்சிக் திரை விமர்சனம்

‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…

15 hours ago

நயன்தாராவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…

15 hours ago

வெப் தொடரில் திரிஷா; நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய தொடர்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…

15 hours ago