siragadikka asai serial episode update 30-10-25
மனோஜ் மற்றும் ரோகினிக்கு மீனா உதவி செய்ய நினைக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜி பார்வதி வீட்டுக்கு சிவன் ரோஜா பூ தொட்டி வாங்கிக்கொண்டு வந்து கொடுக்கிறார் எதுக்காக சிவன் என்று கேட்க இன்னையுடன் நம்ம பிரண்ட்ஷிப் பழகி அம்பது நாளாகுது அதுவும் இந்த செடி மாதிரி வளரனும் என்பதற்காக தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லிக் கொடுக்க பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் விஜயா வருகிறார். இவங்க ரெண்டு பேரும் அடங்க மாட்டாங்க போலயே என்று நினைத்து விட்டு என்ன சிவன் முன்னாடியே வந்துடுறீங்க போல என்று சொல்ல எப்பவுமே எனக்கு கரெக்டான டைமுக்கு வர்றது பிடிக்கும் என சொல்லுகிறார் பிறகு இவர்கள் பேசிக்கொண்டு இருக்க சிந்தாமணி வருகிறார் வந்தவுடனே நீங்க சொல்லிக் கொடுத்த யோகாசனம் பண்ண நல்ல தூக்கம் வந்தது மாஸ்டர் என்று சொல்ல எனக்கு தான் தூக்கம் வராமல் போயிடுச்சு என்று சொல்லுகிறார்.
என்னாச்சு மாஸ்டர் என்ன விஷயம் என்று கேட்க வீட்டில் பாம்பு வந்த விஷயத்தை சொல்லுகிறார் உடனே சிந்தாமணி பாம்பு வந்த வீட்டுல எப்பவுமே ஏதாவது கெட்டது நடக்கும் என்று அர்த்தம் என்று சொல்ல விஜயா பயப்படுகிறார் நீங்கள் பயப்படறதுக்காக சொல்லல மாஸ்டர் ஏற்கனவே எங்களுக்கு தெரிஞ்சவங்க ரெண்டு மூணு பேர் வீட்ல பாம்பு வந்திருக்கு அவங்க வீட்டுல கெட்டது நடந்திருக்கு என்று சொல்ல நீங்க ஏன் விஜயாவ பயமுறுத்துறீங்க சிந்தாமணி என்று பார்வதி கேட்கிறார் உடனே சிந்தாமணி அதுக்காக சொல்லல இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு போயிட்டு வந்தா சரி ஆயிடும் என்று சொல்ல பார்வதியும் எங்க வீட்டிலேயே ஒரு நாள் அப்படி வந்தது நாங்களும் குலதெய்வ கோவிலுக்கு தான் போயிட்டு வந்தோம் என்று சொல்லுகிறார் உடனே விஜயாவும் சரி நான் இதை பத்தி குடும்பத்துல பேசுறேன் என்று சொல்லி முடிவெடுக்கிறார்.
மறுபக்கம் குடும்பத்தினர் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்க விஜயா வந்து அண்ணாமலை இடம் சிந்தாமணி சொன்ன விஷயத்தை சொல்லுகிறார் உடனே அவரும் நானும் அம்மா கிட்ட விசாரிச்சேன் அம்மாவும் சரின்னு சொல்லி இருக்காங்க அப்படியே நம்ம தீபாவளியும் ஊர்ல போய் கொண்டாடிட்டு வந்துடலாம் என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர் உடனே முத்து நான் ஒரு இடத்தில் விசாரிச்சேன் பாம்பு வந்துச்சுன்னா வீட்ல இவ்வளவு நாள் மறஞ்சிருக்குற உண்மை தெரிய போகுதுன்னு அர்த்தம் என்று சொல்ல ரோகிணியின் முகம் மாறுகிறது.
மறுபக்கம் ஸ்ருதியின் ஹோட்டலில் பார்வதியின் பிரண்டு கோகிலா வர அவரது தோழியையும் கூட்டிக்கொண்டு வருகிறார் அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர் என அறிமுகப்படுத்தி வைக்க பிறகு இருவரும் சாப்பிட சொல்லி உட்காருகின்றனர் கொஞ்ச நேரத்தில் மீனா பழ பொக்கே ரெடி பண்ணி எடுத்துக் கொண்டு வந்து ஸ்ருதியிடம் கொடுக்க அவரும் இங்கே வெச்சிடலாம் யாரெல்லாம் கேட்பார்கள் என்று சொல்லி வைக்கிறார். மீனா கிளம்பும்போது உடனே கோகிலா கூப்பிட்டு அவரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார் இவங்க ரொம்ப நல்லவங்க இவரெ ஹஸ்பண்ட் முத்துவும் கார் ஓட்டுகிறார். இரண்டு பேரும் நல்ல கேரக்டர் என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைக்கிறார். பிறகு கோகிலா அவர் எடுத்து தோழியிடம் நீ இப்போ பில்டிங் கட்டிட்டு இருக்கலாம் அங்க இருக்குறவங்க எல்லாருக்கும் பூ ஆர்டர் உங்களுக்கு வாங்கி கொடுக்கிறியா என்று கேட்க கண்டிப்பா வாங்கி தரேன் அப்பதானே பெண் தொழிலாளிகள் முன்னேற முடியும் என்று சொல்லுகிறார் உடனே நான் அந்த வீட்டுக்கு கட்டி மட்டும் கொடுக்கல பிரிட்ஜ் வாஷிங் மெஷின் எல்லாமே நான் தான் ஏற்பாடு பண்றேன்னு சொல்ல மீனா உடனே மனோஜ் கடைக்கு பரிந்துரைக்கிறார் உடனே அவர்களும் உனக்கு ரொம்ப நல்ல மனசுமா. நீ கூட அதை எடுத்துக்கிட்டு லாபம் வைத்து கமிஷன் வாங்கி வேற ஆளு ரெடி பண்ணி கொடுக்கலாம் ஆனா உன்னோட புருஷ அண்ணனுக்கு கொடுக்கணும்னு நினைக்கிற பாத்தியா இந்த காடை என்கிட்ட கொடுத்து என்கிட்ட பேச சொல்லுமா என்று சொல்லுகிறார் உடனே மீனாவும் சந்தோஷப்படுகிறார்.
சுருதி மீனாவிடம் நான் புராணத்தில் தான் ரொம்ப நல்லவங்க இருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இப்பதான் நேர்ல பாக்குறேன் என மீனாவிடம் சொல்லுகிறார். யாருக்காகவும் நம்ம குணத்தை மாத்திக்கணும்னு அவசியம் இல்ல ஸ்ருதி என்று சொல்லிவிட்டு மீனா சென்று விடுகிறார் மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா ரோகிணிக்கு போன் போட்டு பணத்தை கேட்கிறார் நீ என்னை ஏமாத்தணும்னு நினைச்சின்னா உங்க மாமியார் கிட்ட போன் பண்ணி சொல்லிடுவேன் என சொல்ல ரோகிணி என்ன சொல்லுகிறார்? அதற்கு ஸ்ருதியின் அம்மாவின் பதில் என்ன ?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோ
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘வடசென்னை 2’ திரைப்படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்…