மனோஜ் சொன்ன விஷயம்,ரவுண்ட் கட்டி அடித்த போலீஸ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சிக்கல் வர மனோஜ்க்கு அடி விழுந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி அம்மாவிடம் அப்பா போட்டோ எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சொல்ல அந்த போட்டோவை எதற்கு என்று ரோகினி அம்மா கேட்கிறார். பிறகு நடந்த விஷயங்கள் அனைத்தையும் ரோகிணி அம்மாவிடம் சொல்ல தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டே போகாத கல்யாணி இந்த விஷயம் எல்லாம் உங்க குடும்பத்துக்கு தெரிஞ்சா உன்ன வாழ விடுவாங்களா என்றெல்லாம் அட்வைஸ் கொடுக்க எல்லாத்துக்கும் காரணம் நீதான் எனக்கு மனோஜ் புடிக்கும் என இந்த வாழ்க்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கோபமாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

போலீஸ்காரர்கள் பிளாட்பார்மில் கடை வைத்திருப்பவர்களை கிளியர் செய்து கொண்டு வருகின்றனர் அப்போது செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் கடையை எடுக்க அவர்கள் போலீஸிடம் கெஞ்சியும் கொடுக்காமல் இருக்கின்றனர் உடனே முத்துவும் மீனாவும் காரில் வந்து இறங்க அவர்கள் சொல்லியும் போலீஸ்காரர்கள் கேட்கவில்லை ஒரு கட்டத்திற்கு மேல் பொருளையும் ஏத்துறீங்க என்று சொல்லு ஸ்டேஷன்ல வந்து வாங்கிக்கோங்க என்று சொல்லுகிறார் பாட்டி பொருள்களை வாங்க போக போலீஸ்காரர் அவரை இழுத்து தள்ளிவிட பாட்டிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது இதனால் டென்ஷனான முத்து போலீசின் காலரை பிடித்து கேள்வி கேட்கிறார் இதனால் டென்ஷன் ஆன போலீஸ் எம் மேல ஏ கை வைக்கிறியா என்று அடிக்கப் போக மற்றொரு போலீஸ் அந்த பாட்டிக்கு தலைல இரத்தம் வருது கிரௌடு கூட்டிட்டாங்க வந்துருங்க என்று சொல்லி அழைத்து சென்று விடுகின்றனர் இருவரும் முறைத்து கொண்டே இருக்க பாட்டியை காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர் அவங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை ஆனால் ஹீமோகுளோபின் லெவல் கம்மியா இருந்ததுனால திரும்பவும் பிளட் லாஸ் அதிகமா இருக்கு.

அவங்களுக்கு இப்போ பிளட் ஏத்தணும் ஏத்துனா சரியா போயிடுவாங்க என்று சொல்லி பி பாசிடிவ் பிளட் கேட்கின்றனர் ஆனால் மீனாவிற்கும் சீதாவிற்கும் ஏ பாசிட்டிவ் என்பதால் சரி தெரிந்த இடத்தில் விசாரித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்து சீதாவை ஹாஸ்பிடலில் பார்த்துக்க சொல்லி விட்டு இருவரும் கிளம்புகின்றனர்.

மறுபக்கம் போட்டோவை எடுத்துக் கொண்டு வந்த ரோகினி வீட்டில் அமைதியாக வந்து போட்டோவை பார்த்து அப்பா அப்பா என அழுது பார்க்கப்போல் நாடகம் ஆட ஆரம்பிக்கிறார். நான் கோவமா இருந்தா போதும் எங்க அப்பா என்கிட்ட போன் பண்ணிக்கிட்டே இருந்தாரு நான் தான் பேசல. அவர் என்ன பாக்க வரன்னு சொன்னாரு அதுவும் முடியல என்று வருத்தப்பட்டு அழுது கொண்டிருக்கிற மனோஜ் கையில் போட்டோவை வாங்கி டேபிள் மேலே வைத்து பூ வைத்து நான் உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசைப்பட்ட அங்கிள் அப்படி முடியல உங்க பொண்ண நல்லா பாத்துப்பேன் என்று சொல்கிறார். உடனே விஜயா போட்டோ என்கிட்ட சென்று நாங்களும் உங்கள பாக்கணும்னு நினைச்சோம் உங்க சொத்து ரோகினிக்கு வந்துட்டா உங்க ஆத்மா சாந்தி அடையும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சடைகின்றனர் சுருதி உங்க அம்மா மைண்ட் வாய்ஸ் நினைச்சு சத்தமா பேசிகிட்டு இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். என்ன போட்டோபா இது திருப்பியும் திருஷ்டி போட்டோ எல்லாம் வாங்கிட்டானா என்று கேட்டேன் என்ன ஜென்ஸ் போட்டோவா இருக்கு என்று கேட்கிறார் முத்து.

உடனே அண்ணாமலை உனக்கு எப்ப பாத்தாலும் கிண்டல் தான் இது ரோகினி ஓட அப்பா என்று சொல்ல முத்து ஃபோட்டோவை உத்து பார்த்துவிட்டு மலேசியாவில் இருந்தாங்கன்னு சொல்லவே நான் என்னமோ கோட்டு சூட்டு கண்ணாடி எல்லாம் போட்டுட்டு இருப்பார் என்று பார்த்தால் நம்ம பக்கத்து வீட்டு அங்கிள் மாதிரி இருக்காரு என்று கிண்டல் பண்ண விஜயாவிற்கு சந்தேகம் வருகிறது. உடனே ரோகினி அவரே சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு முன்னேறி வந்தாரு மலேசியா போறதுக்கு முன்னாடி அவர் இப்படித்தான் இருந்தார் என்று சொல்லி சமாளித்து விடுகிறார் உடனே விஜயா சரி நீ இந்த போட்டோ எடுத்து போய் ரூம்ல வச்சுக்கோமா என்று சொல்லி அனுப்புகிறார்

உடனே முத்து நான் ஒரு செருப்பு தைக்கிற பாட்டி பத்தி சொல்லி இருக்கேன்லப்பா அவங்களுக்கு வந்து பிளட் தேவைப்படுது பி-பாசிட்டிவ் குரூப் தேவைப்படுது. என்று சொல்ல உடனே அண்ணாமலை மனோஜ்க்கு பி பாசிட்டிவ் தான் என்று சொல்ல நான் கொடுக்க மாட்டேன் எனக்கு பயம் என்று மனோஜ் சொல்லுகிறார். உடனே ஸ்ருதி அதெல்லாம் ஒன்னும் ஆகாது கொஞ்சமா தான் எடுப்பாங்க திருப்பியும் 48 ஹவர்ஸ்ல அந்த பிளட்டர் இது ஃபுல்லா ஆயிடும் என்று சொல்ல என்ன சொன்னாலும் நான் கொடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிறகு சுருதி அந்த வீடியோவை நம்ம சோசியல் மீடியால போட்டோ நான் நிறைய பேர் வந்து உதவுவாங்க என்று சொல்ல சரி நமது பண்ணுவோம் என்று யோசித்து கொண்டு இருக்கின்றனர்.

மறுபக்கம் முத்துவும் மீனாவும் பாட்டிய ஒரு பத்திரமான இடத்துல வச்சிருக்கணும். அவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு ஒரு ஆள் வேணும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா என்று முத்து கேட்கிறார் இங்கே நமக்கே இடம் இல்ல அவங்களே கூட்டிட்டு வந்து எங்க தங்க வைக்கிறது அது மட்டும் இல்லாம உங்க அம்மா சும்மா இருப்பாங்களா என்று சொல்ல அதுவும் கரெக்டுதான் என்று சொல்லுகிறார்கள் உடனே மீனா எங்க அம்மா வீட்ல எல்லாம் தங்க வைக்கவா என்று சொல்ல வேணாம் அவங்களுக்கு வேலைக்கு போயிட்டு வாங்க வாடகை வீட்டில் வேற இருக்காங்க ஏதாவது பிரச்சனை வரும் சரி விடு பாத்துக்கலாம் என்று யோசிக்க உடனே மீனா வித்யா வீட்டில் விடலாமா என்று கேட்க அந்த பொண்ணு வேலைக்கு போயிடும் அது மட்டும் இல்லாம பார்லர் அம்மா ஃபிரண்ட் நிறைய வில்லங்கம் தான் என்று சொல்லிக் கொண்டிருக்க வேறு எங்கு தான் விடுவது என்று யோசித்து முத்து எனக்கு ஒரு ஐடியா தோணுது ஆனா நீ தப்பா நினைச்சுக்க கூடாது என்று சொல்லி முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர் மீனாவும் சரியாக எல்லாரும் கூட இருக்காங்க கரெக்டா சமையல் செஞ்சு கொடுத்துடுவாங்க ரெஸ்ட் எடுப்பாங்க என்று முடிவு எடுத்து என்ன செலவானாலும் நம்ம பாத்துக்கலாம் என்று முத்து சொல்ல அந்த நேரம் பார்த்து அண்ணாமலை வந்து எந்த செலவ எதுக்கு போறீங்க என்று கேட்கிறார்.

உடனே முத்து அந்த தாத்தா பாட்டி அனாதை இல்லத்தில் சேர்க்க போறோம் என்று சொன்ன அவர்களுக்கு பசங்க யாரும் இல்லையா என்று கேட்கிறார் இருக்காங்க என்று சொல்ல அவங்களுக்காக நீங்க இவ்வளவு ரிஸ்க் எடுத்து பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று அருணாச்சலம் பேசிக் கொண்டிருக்க இரண்டு போலீஸ் வந்து முத்து யார் என்று கேட்கிறது.

நான் தான் என்று சொல்ல உங்களை அரெஸ்ட் பண்றோம் என்று சொன்னவுடன் எதுக்கு என்று முத்து கேட்கிறார்.உடனே விஜயா வந்து கொஞ்ச நாள் வராமல் இருந்தாங்க திருப்பி வர ஆரம்பிச்சிட்டாங்க இவனுக்கு என்ன இது புதுசா எதுனா கேட்கிறார் உடனே அண்ணாமலை எந்த நேரத்தில் என்ன பேசணும்னு தெரியாம பேசாத என்று சொன்னால் ரவி சுருதி இருவரும் வருகின்றனர். என்னாச்சு என்ன பிரச்சனை மீனா என்று கேட்க முத்துவும் மீனாவும் அங்கு நடந்த விஷயங்களையும் போலீஸ் தாத்தா பாட்டி இடம் நடந்த விஷயங்களையும் சொல்ல சுருதி உங்க மேல என்ன தப்பு இருக்கு அப்ப போலீஸ் மேலயும் தானே தப்பு இருக்கு என்று சொல்ல போலீஸ் மேல பாதிக்கப்பட்டவங்க கம்ப்ளைன்ட் கொடுத்தா நாங்க அந்த கேஸ் எடுப்போம் இப்போ நீ வா என்று முத்துவை அழைத்து சென்று விடுகின்றனர். உடனே மீனா பின்னாலே கிளம்ப போக விஜயா அவரை நிறுத்தி சாப்பாடு யார் சமைக்கிறது என்று கேட்கிறார்.உடனே மீனா உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா அரெஸ்ட் பண்ணிட்டு போறது என்னோட புருஷன் அதை விட்டுட்டு சாப்பாடு செய்யலையான்னு கேக்குறீங்க எனக்கு என்னோட புருஷன் தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு போகிறார் உடனே விஜயா எவ்ளோ திமிரா பேசிட்டு போற பாத்தீங்களா என்று சொன்ன நீ எந்த நேரத்தில் என்ன பேசணும்னு தெரியலையா நீ போய் சமைச்சு சாப்பிடனும்னா நீ போய் சாப்பிடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மறுபக்கம் முத்துவை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து உட்கார வைக்க அந்த இரண்டு போலீஸ்காரர்களும் வருகின்றனர். என்கிட்ட அவ்வளவு திமிரா பேசினா இங்க பேச முடியுமா உன்னால என்று சொல்ல முத்து என்கிட்ட இருக்கிறது என்னோட நேர்மை தான் அதுக்காக நான் எங்க வேணா பேசுவேன் என்று சொல்லி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த போலீஸ் வெளியில் வேலை வந்திருப்பதாக சென்று விட கொஞ்ச நேரத்தில் ரோகிணியும் மனோஜ் வருகின்றனர். இவர்களைப் பார்த்து இவங்க எதுக்கு உட்கார்ந்துட்டு இருக்காங்க சொல்ல ரோகிணி. உன் தம்பிக்கு ஸ்டேஷன் என்ன புதுசா என்று அவர்கள் வந்த விஷயத்தை விசாரிக்க செல்கின்றனர் மனோஜ் நான் கேட்கிற விதத்தில் கேட்கிறேன் என்று போய் ஒரு கான்ஸ்டபிள் காதில் ஒரு விஷயத்தை சொல்ல அவர் மனோஜை அறைந்து விடுகிறார் உடனே மற்றொருவர் வந்து நீங்க அவ்வளவு சீக்கிரம் அடிக்க மாட்டீங்களே என்ன ஆச்சு என்று கேட்க மனோஜ் சொன்ன விஷயத்தை அந்த போலீஸ்காரர் காதில் சொல்ல அவரும் டென்ஷன் ஆகி மனோஜ் கன்னத்தில் அரைகிறார். பிறகு இன்னொரு போலீஸ்காரரிடம் என்னாச்சு என்று கேட்க அவரிடம் காதில் சொன்னவுடன் மீண்டும் அவரும் சேர்ந்து மனோஜை அறிய ரோகினி கோபப்பட்டு எதுக்கு இப்படி மாத்தி மாத்தி அடிச்சிக்கிட்டு இருக்கீங்க அவர் என்ன சொன்னார் என்று கேட்க நீ அவன் சொன்ன பேச்சுக்கு ஒரு வாரம் ஸ்டேஷன்ல ஊர வச்சு அடிச்சுருப்போம் ஒழுங்கா போயிட்டு வரதுக்குள்ள என்றும் மிரட்டி அனுப்புகின்றனர். ஸ்டேஷனுக்கு வெளியில் வந்த மனோஜ் ரோகினி என்னதான் சொன்ன அப்படி என்று கேட்க மீண்டும் மனோஜ் ரோகினி காதில் சொல்ல ரோகிணி மனோஜை அறியப்போக உன்ன போய் கூட்டிட்டு வந்தேன் பாரு நானே தனியா வந்து இருக்கணும் என்று சொல்லி திட்டி அழைத்து சென்று விடுகிறார்.

பிறகு இன்ஸ்பெக்டர் வர என்ன நடக்கிறது? முத்து தரப்பின் கோரிக்கையை இன்ஸ்பெக்டர் ஏத்துக் கொள்வாரா? முத்து வெளியே வருவாரா ?இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

12 hours ago

Train Official Teaser

Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu

12 hours ago

Anbe Diana Official Trailer

Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar

13 hours ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

13 hours ago

இதயம் முரளி திரை விமர்சனம்

பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…

13 hours ago

லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்

1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…

13 hours ago