siragadikka asai serial episode update 19-09-25
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் அனுப்பிடுவோம் என்று சொல்ல உடனே மனோஜ் வாஷிங் மெஷின் எடுத்துக்க சொல்லுகிறார். மறுபக்கம் விஜயாவின் யோகா கிளாஸுக்கு அனைவரும் வந்துவிட விஜயாவும் கொஞ்ச நேரத்தில் வருகிறார் உங்க எல்லார்கிட்டயும் நான் முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லிவிட்டு பார்வதி இடம் வீடியோ எடுக்க சொல்லுகிறார்.
பிறகு கிரஷ் வீட்டிலிருந்த விஷயத்தையும் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவன் பண்ண தப்புக்காக கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க ஆனால் நான் தான் சின்ன பசங்க தப்பு பண்ணுவாங்க ஆனா அதுக்காக சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போகக்கூடாது அப்படின்னு என்னோட இரண்டாவது பையனோட உதவியோட அவங்க ஸ்கூல்ல போய் கெஞ்சினேன் என்று கதை கதையாக அளந்து விடுகிறார் முத்துமீனா செய்ததை தான் செய்தது போல பேச அனைவரும் கைதட்டுகின்றனர் கொஞ்ச நேரத்தில் மீனாவும் கைதட்டிக் கொண்டே உள்ளே வர விஜயா அதிர்ச்சி அடைகிறார்.ஆமா எங்க அத்தைக்கு ரொம்ப நல்ல மனசு இவங்கள மாதிரி இருந்தா இந்த உலகத்துல எவ்வளவு நல்லது நடக்கும் என்று மீனா பெருமையாக சொல்லுகிறார் ஆனால் ஒரு சிலர் அந்தப் பையன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போகணும்னு ஆசைப்பட்டாங்க என்று சொல்லுகிறார் ஆனால் எங்க அத்தைக்கு அது மாதிரி எண்ணம் கிடையாது என்று மறைமுகமாக விஜயாவுக்கு பதில் கொடுக்கிறார். இங்கெல்லாம் சில பேர் சொந்த மகனே சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பனும்னு சொல்லுவாங்க ஆனா எங்க அத்தை அப்படி கிடையாது என்று சொல்லுகிறார்.
உடனே மீனாவை விஜயா வெளியில் அழைத்து வந்து உன்னை யார் இங்கு வர சொன்னது என்று கேட்கிறார் நீ எதை வச்சு சொன்ன எனக்கு தெரியும் என்று சொல்ல உங்களுக்கு தான் எல்லாமே தெரியும் அத்தை என்று மீனா சொல்லுகிறார் இது போயி மாமா கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காத உடனே அவர் என்னை திட்டுவாரு என்று சொல்ல நான் எதுக்கு தான் அப்படி பண்ணனும் என்று கேட்கிறார் உடனே மீனா அங்கிருந்து கிளம்பி விட மீனா மறைமுகமா உன்ன தான் திட்டிட்டு போறா என்று சொல்ல ஆமா நீ பெரிய கண்டுபிடிப்பு கண்டுபிடிச்சிட்டேன் என்று பார்வதியை திட்டுகிறார். மீனா சென்று விட எதிரில் சிந்தாமணி வருகிறார் ஆனால் மீனா எதுவும் பேசாமல் சென்று விட உள்ளே வந்த சிந்தாமணி விஜயாவிடம் உங்க இரண்டாவது மருமகள் என்ன சொல்லிட்டு போனா தெரியுமா என்று கேட்க என்ன சொன்னா என்று விஜயா கேட்கிறார் ஏற்கனவே டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சு பாதியிலேயே மூடிட்டாங்க இதை எப்ப மூட போறாங்களோ தெரியல என்று சொன்னதாக பொய் சொல்ல விஜயாவும் அவ சொல்லி இருப்பா என்று சொல்லுகிறார் ஆனால் பார்வதி மீனா அப்படி சொல்ற பொண்ணு கிடையாது என்று சொல்ல சிந்தாமணி அவன் ஒரு ஒருத்தர்கிட்ட ஒரு ஒரு மாதிரி பேசுவா என்று சொல்லி அவர் திமிரு அடக்கிறேன் என விஜயா சொல்லுகிறார். எனது யோகா கிளாஸில் இருக்கும் ஒருவர் பார்வதி இடம் வந்து ஒரு பேப்பரை கொடுக்க அதில் பார்வதியின் படம் வரைந்து இருக்கிறது அவர் கவிதையால் சொல்ல என்ன கொஞ்ச நேரம் அப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்கன்னா இங்க போலீஸ் வரும் என சொல்லி அந்த பேப்பரை தூக்கிப் போட்டு விடுகிறார்.
வீட்டுக்கு வந்த மீனா முத்து இருப்பதை பார்த்து நீங்க சவாரிக்க போகலையா என்று கேட்க எதுவும் வரல அதனால வீட்டுக்கு வந்துட்டேன் என சொல்லுகிறார் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லு அப்பிடியே சொல்ல மாட்டீங்களே என்று சொல்ல முதல்ல என்ன விஷயம் என்று சொல்லு என சொல்லுகிறார். விஜயா பேசிய விஷயத்தை முத்துவிடம் வீணா சொல்ல கொஞ்ச நாள் அம்மா இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க ஏதோ ஒரு விஷயம் இருக்கு அதை கண்டுபிடிக்கணும் என பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து சந்திரா பதட்டமாக போன் போட்டு நீ சீக்கிரமா வீட்டுக்கு வாங்க இங்கு கிறிஸ் பாட்டி வந்து கிருஷ் கூட்டிட்டு போகணும்னு ஒரே கத்தி ரகளை பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல நாங்க வரவிருக்கும் அனுப்பிடாதம்மா ஏதாவது பேசிட்டு இருந்து வந்துருறேன்னு சொல்லி மட்டும் கிளம்புகின்றனர்.
க்ரிஷ் பாட்டி என்ன சொல்லுகிறார்? முத்து மீனா என்ன பண்ணப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
[Best_Wordpress_Gallery id="1035" gal_title="Bhagavan Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1034" gal_title="Breakfast Movie Audio Launch"]
[Best_Wordpress_Gallery id="1033" gal_title="Light Weight Baby Title Launch"]
[Best_Wordpress_Gallery id="1032" gal_title="LIK Thanks Giving Meet"]
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்ற நடிகை Riythvika, தனது திருமணம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்த…
இலங்கையைச் சேர்ந்தும் தமிழர் பண்பாட்டு வேர்களை தன்னகத்தே கொண்டும் உலக இசை ரசிகர்களை கவர்ந்த குரலாக திகழ்கிறார் Dhee. தனித்துவமான…