மனோஜ்க்கு ஆறுதல் சொன்ன விஜயா,ஸ்ருதி அம்மா கேட்ட கேள்வி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுதும் மீனா சாப்பிட மறுக்க உடனே முத்து நானும் ரெண்டு நாளா சாப்பிடல ஆனா என் உடம்பு தாங்கும் உன் உடம்பு தாங்காது சாப்பிடு என்று சொல்ல,நீங்க ஏன் சாப்பிடல முதல நீங்க சாப்பிடுங்க என்று மீனா சொல்லுகிறார். முதல்ல நீ சாப்டா தானே சாப்பிட்டுவேன் என்று சொல்ல முத்து மீனாவே உட்கார வைத்து ஊட்டி விட வேண்டாம். முத்துக்கு ஊட்டி விடுகிறார் பிறகு இதை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கம் விஜயா கோபமாக பார்வதி வீட்டுக்கு வந்து அந்த பார்லர் காரிய கூட்டிட்டு வந்தது நீ தானே என் பையன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன் நீ தான் அவளை இந்த ஊரை விட்டு தொரத்தனும் என்று சொல்ல பார்வதி என்னால் எப்படி பண்ண முடியும் என்று கேட்கிறார்.

ரோகிணி பண்ணது தப்புதான் ஆனா நான் அவளை அறிமுகம் மட்டும் தான் படுத்தி வச்ச அவ பணக்காரனு தெரிஞ்ச உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது நீ சொல்லித்தான் நான் பண்ணு என்று சொல்ல உடனே சிவன் பார்வதியால் எப்படி சொல்ல முடியும். எத்தனையோ பேரை பார்வதி உங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சிருக்கலாம். அதுக்காக இப்படி சொல்ல முடியாது என்று சொல்லிவிட உடனே விஜயா கோபமாக உன்கிட்ட வந்தது ஏன் தப்பு தான் இனிமே நான் வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சீதாவும் அவரது அம்மாவும் மீனாவுக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார் திருப்பியும் இன்னைக்கும் சாப்பிடாமல் இருக்க போறியா அதான் மாப்பிள்ளை சொல்லி இருக்காரு இல்ல சாப்பிட சொல்லி என்று சொல்லி சாப்பாடை கொடுக்க மீனாவும் ஒரு வாய் சாப்பிடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் முத்து பழங்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

அவ பண்ணது தப்புதான் அதை எல்லாம் மறக்க முடியாது அதுக்காக சாப்பிடாம இருக்க தேவையில்ல சாப்பிடுங்க என்று சொல்ல உடனே மீனா நீங்க சாப்டீங்களா என்று கேட்கிறார் நான் சாப்பிட்டேன் என்று சொல்ல நிஜமாகவே சாப்பிட்டீங்களா என்று கேட்க எனக்கு பொய் சொல்லவும் மறக்கவோ தெரியாது உண்மைதான் சொல்லுவேன் என சொல்லுகிறார் உடனே மீனாவின் முகம் மாறுகிறது. மனோஜ் ரூமிலேயே ரோகினி என் நினைவால் அழுது கொண்டு இருக்க விஜயா வந்து இப்படியே இருக்கிறது எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்று சொல்ல அவளை நான் எவ்வளவு நம்பினோமா இந்த ரெண்டு வருஷத்துல அவ தான் என்னோட உலகம் உன்னை நினைச்சேன் எனக்கு இப்படி துரோகம் பண்ணிட்டாளே அவ இல்லாம நான் எப்படி வாழ போற என்று கண்கலங்குகிறார். நீ அவளை மறந்துடுடா என்று சொல்ல அது எப்படி என்னால மறக்க முடியும் அவ மேல நான் இவ்வளவு பாசமா இருந்தேன் தெரியுமா என்று சொல்லுகிறார்.

நீ இப்படியே இருக்காதுடா வந்து வெளியே உட்காரு என்று மனோஜை அழைத்துக் கொண்டு வந்து வெளியில் உட்கார வைக்கிறார் அண்ணாமலை வந்தவுடன் உங்களுக்கு தெரிந்த வக்கீல் இருந்தா சொல்லுங்க அந்த பார்லர் காரிய டைவர்ஸ் பண்ணி துரத்தி விடணும் என்று சொல்ல ஏற்கனவே அவசரப்பட்டு எடுத்த முடிவுனால தான் இப்படி இருக்கு இதுக்கப்புறம் அவசரப்பட வேணா பொறுமையா இரு என்று சொல்லுகிறார் அங்க மீனாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்கு அத பத்தி ஏதாவது கேட்டியா என்று கேட்க அவளை எதுக்கு நான் கேட்கணும் அவ எங்க எல்லாரையும் சாவடிச்சிட்டு தான் சாவா என்று சொல்லுகிறார். உடனே ஸ்ருதியின் அம்மா கொஞ்ச நேரத்தில் வந்து என்ன பேசுகிறார்? அதற்கான அண்ணாமலை பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 14-01-26
jothika lakshu

Recent Posts

Adiye En Poonthene Lyrical Video

Adiye En Poonthene Lyrical Video | Jana Nayagan | Hon’ble CM Vijay | Pooja Hegde…

43 minutes ago

Sengathiye Lyrical Video

Sengathiye Lyrical Video | Delivery Boy | Leo Sivakumar | Brigida Saga | Nani |…

50 minutes ago

சல்மான் கானின் புதிய தோற்றம்… ரசிகர்கள் அதிர்ச்சி?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவரது புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை…

4 hours ago

“என் வாழ்க்கையை மீண்டும் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்!” – அனுபமா பரமேஸ்வரனின் எமோஷனல் பதிவு வைரல்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உணர்வுப்பூர்வமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த…

4 hours ago

“நடிகராக 3-வது தேசிய விருது… இயக்குநராக முதல் தேசிய விருது!” – நெகிழ்ந்த தனுஷ்

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் நடிகர், இயக்குநர் தனுஷ் இரட்டை அங்கீகாரத்தை பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர்…

4 hours ago

3-வது தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ்… நெகிழ்ச்சியுடன் வாழ்த்திய ஏ.ஆர். ரஹ்மான்!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை 'அமரன்' திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்…

4 hours ago